ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். நவரத்தினங்களை பற்றிய பதிவு இது. பகுதி 2..
முதன் முதலாக ரத்தினங்கள் தோன்றியதை பற்றி புராணங்கள் எடுத்து சொல்கின்றன. இந்த புராணத்தகவல்கள் ஜோதிடத்திற்கு தேவைப்படுவனவாகும்.
வைரத்தை தவிர மற்ற எட்டு
வகை ரத்தினங்கள் பலாசுரன் எனும் அரக்கனின் எலும்பிலிருந்து முதன்முதலாக வெளிப்பட்டதாக
புராணங்கள் சொல்கின்றன. பலம் என்றால் சக்தி
என்று பொருள். பலாசுரனின் பெயருக்கேற்றவாறு
அவன் எலும்பிலிருந்து தோன்றிய ரத்தினங்களும் அதிக சக்தி படைத்தனவாக இருந்தன. இந்த சக்தி கிரகங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கு
மேலும் சக்தியேற்றுவதாக அமைந்திருந்தது. இந்த
புராண செய்தியில் ஒரு உட்பொருள் மறைந்துள்ளது.
அதாவது...................சூரியனின் காரகத்துவம் [ தாது ] எலும்பு. எலும்புகள் நல்ல முறையில் வலுவுடன் அமையவேண்டுமானால்
சூரியன் அருள் வேண்டும். பலாசுரனுக்கு அது
கிடைத்திருந்தது. பலாசுரனின் எலும்புகள் சூரியன்
அருளால் அதிக சக்தி படைத்தனவாக இருந்தன. அதனால்
அதிலிருந்து தோன்றிய ரத்தினங்களும் அதிக சக்தி படைத்தனவாக இருந்தன. இதிலிருந்து சூரியனுக்கும் ரத்தினங்களுக்கும் மிக
நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த புராண வாயிலாக அறிய முடிகிறது. எனவே ரத்தினங்கள் சக்தி பெற சூரியகதிர்கள், அதன்
மேல் விழுமாறு ஒரு முஹூர்த்த நேரமாவது தினசரி வைக்க வேண்டும் என மெய்ஞானமும், விஞ்ஞானமும்
சொல்கிறது. இப்படி சக்தி பெறும் ரத்தினங்கள்
நமக்கு யோகங்களை அள்ளி வழங்குகின்றன. இதை அனுகூல
சக்தி முறை என ஜோதிட சாஸ்த்திரம் சொல்கிறது.
இந்த அனுகூல சக்தி முறை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.....................
நமது ஜாதகத்தில் நல்ல யோகம்
தரக்கூடிய கிரகம் அமைந்திருக்கும். இந்த கிரகம்,
தன் தசைக்காலத்தில் நல்ல யோகம் தரும். ஆனால்,
ஜாதக அமைப்பில் நல்ல யோகம் தரக்கூடிய அந்த கிரகம், சக்தி குன்றியிருந்தால். நல்ல யோகம்
தர இயலாமல் தடுமாறும். இத்தகைய சூழலில், அந்த
கிரகத்திற்கு சக்தியேற்ற, அந்த கிரகத்துக்குரிய ரத்தினக்கல்லை அணிந்தால், கிரகத்தின்
சக்தியை, ரத்தினக்கல் ஈர்த்து, பெருக்கி நமக்கு தந்துவிடும். நாம் முன்பு பார்த்த புராண தத்துவப்படி, சூரியன்
அருள் பலாசுர எலும்பான ரத்தினத்திற்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் ரத்தினத்தின் சக்தி மென்மேலும்
பெருகும். எனவே, ரத்தினக்கலுக்குரிய, யோக கிரகத்திற்கு,
ஜாதகத்தில் சூரியன் நல்ல ஸ்தானாதிபதி என்ற முறையிலோ, அல்லது யோக கிரகத்திற்கு நட்பு
என்ற முறையிலோ, சூரிய இணைவு இருத்தல் மிக விசேஷமானது. இத்தகைய அமைப்பு மட்டும் இருந்துவிட்டால், அணியும்
ரத்தினக்கல் மூலம், ஜாதகர் வாழ்க்கையின் சிகரத்திற்கே சென்று விடுவார் என்பதில் ஐயமில்லை. சூரியனுடைய பரிபூரண அருள் யோக கிரகத்தை அடைந்து,
அதன் மூலம் ரத்தினக்கல்லை அடைகிறது என்பது இதன் அடிப்படை தத்துவம். ரத்தினக்கல் அணிவதில் நிறைய ஆன்மிக கட்டுப்பாடுகள்
உள்ளன. அதுபோல், தரம், அளவு, உட்பிரிவு ஆகியனவற்றையும்
கவனிக்க வேண்டும். அவற்றை இனி வரும் கட்டுரைகளில்
பார்க்கலாம். இனி அனுகூல சக்தி முறை மூலம்
ரத்தினக்கல் அணிந்து, உலகில் புகழேணியின் உச்சிக்கு சென்று சாதனை படைத்து பெரும் கோடீஸ்வரராக
திகழ்ந்த நடிகர். திரு அமிதாப்பச்சன் அவர்களின் ஜாதகத்தை பார்ப்போம். ஜாதகம் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு சனிதிசை
1971, ஜனவரியில் தொடங்கியது. சனிதிசைக்காக,
சனியின் ரத்தினக்கல்லான நீலத்தை இவர் அணிந்தார் என இவரை பற்றிய வலைதள குறிப்புகள் சொல்கிறன. 1974, ஜனவரியில் புதன் புக்தி தொடங்கியது. அப்போது திரைப்படத்துறையில் நுழைந்து அறிமுகமான
முதல் இந்திப்படமான ' ஜஞ்ஜீர் ' வருடக்கணக்கில் ஓடி பெரும் புகழை தந்தது. தொடர்ந்து வெற்றி படங்கள் வெளியாயின. தொலைகாட்சியில், ' கோன் பனேகா க்ரோர்பதி
", என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும்பணமும், புகழும் ஈட்டினார். இதற்கெலாம் காரணமாக சனியின் நீலக்கல் அமைந்திருந்து. இதை இவரது ஜோதிடர் அனுகூலசக்திமுறைபடி அணியசெய்திருக்க
வேண்டும். அந்த கணிப்பு எவ்வாறு அமைந்து வெற்றி
பெற்றது? என்று ஆராய்வோம். இந்த ஆராய்ச்சி
என்னுடைய கணிப்பின்படி எவ்வாறு? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். [ [ [ தொடரும் ] ] ]
No comments:
Post a Comment