Monday 23 June 2014

பெயர் சூட்டும் பெற்றோர்க்கான பதிவு இது. பாகம் / 2..

M


     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  பெயர் சூட்டும் பெற்றோர்க்கான பதிவு இது. பாகம் / 2..  பாகம் 1 தொடர்ச்சி.............பெயர் சூட்டுவதில் ந்யுமராலஜி எப்படி ஆதிக்கம் பெற்ற்தோ! அது போல் தற்போது ப்ரோனாலஜி மெதுவாக ஆதிக்கம் பெற்று வருகிறது.  ப்ரொனாலஜி என்றால் தமிழில் ' ஒலி உச்சரிப்பு இயல் ', என்று பொருளாகும்.  ஒரு மொழியில் உள்ள சொல்லை சிதைக்காமல் உச்சரிப்பதும், அந்த சொல்லின் பொருள் மாறாமல் உச்சரிப்பதுமே ப்ரொனாலஜி என்னும் ஒலி உச்சரிப்பு இயல் ஆகும்.  அதாவது, பஞ்சாக்ஷரம் என்ற சொல்லை பஞ்சு என்று சுருக்கினால் அது முழுமையாக இல்லாமல் சிதைந்து விடுகிறது.  இது ப்ரொனாலஜிபடி தவறாகும்.  அதுபோல் பஞ்சாச்சரம் என்பது தவறாகும்.  மன்னார்சாமி என்பதை மண்ணார்சாமி என்று உச்சரித்தாலும் தவறாகும்.  மன்னார்சாமி என்பது திருமாலில் பெயராகும்.  ஆனால் மண்ணார்சாமி என்று உச்சரிக்கும்போது, ' மண் ' என்ற பொருள்படும்படி உச்சரிப்பதால் பொருள் மாறிவிடுகிறது.  அடிக்க மன்னார்சாமி என்பதை மண்ணார்சாமி என்பதால் மண்ணார்சாமி வாழ்க்கை மண்ணாகிவிடும் என்பதை நம்பவேண்டியிருக்கிறது. 

     நம்மை சுற்றி எப்போதும் ' ததாஸ்து தேவதைகள் ', உலவிக்கொண்டிருப்பதாக சாஸ்த்திரங்கள் சொல்கிறன.  ததாஸ்து என்றால் ' அப்படியே ஆகட்டும் ', என்று பொருள்.  எனவே எப்போதும் நாம் நல்லவைகளையே சொல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுருத்தியிருக்கிறார்கள்.  துன்பம் வந்தால் இறைவன் பெயரை சொல்ல வேண்டும்.  அன்றி ' ஐயோ ', என்றல் ஆகாது.  ஐயோ என்பது யமனின் மனைவி பெயர்.  இறைவனை அழைத்தால் இறைவன் வருவான்.  ஐயோ என்றால் யமனின் மனைவிதான் வருவாள்.  ஆகையால் மன்னார்சாமியை அழைக்க வேண்டுமே தவிர மண்ணார்சாமியை அழைக்கக்கூடாது.  இதைத்தான் ப்ரொனாலஜி வலியுருத்துகிறது.  இனி ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பாரம்பரியம், ந்யுமராலஜி, ப்ரொனாலஜிபடி மூன்றுக்கும் எதிராக அமையாமல் பெயர் சூட்டிப்பார்க்கலாம்.  நண்பர் திரு தனவேல் என்பவருக்கு கடந்த 12.06.2014 அன்று அதிகாலை 03.18 மணிக்கு கும்பகோணத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.  அக்குழந்தைக்கு பெயர் சூட்டுவோம்.  ஜாதகம் கணித்துகொடுத்துள்ளேன். 

     முதலில் நற்பலன் தராத கிரகங்க்களை ஒதுக்கலாம்.  ஆகவே 6.8.12 ஆகிய ஸ்தானாதிபதிகளை ஒதுக்கலாம்.  முறையே புதன், செவ்வாய், குரு.  செவ்வய் லக்னாதிபதி என்றாலும் ஆறில் பகையாகி விட்டார்.  இனி 6.8.12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் கிரகங்களை ஒதுக்கலாம்.  6.12, , கிரகங்கள் எதுவும் இல்லை.  8ல் இருக்கும் சந்திரனை ஒதுக்கலாம்.  வக்கிரம் பெற்றதால் சனியையும், பகை பெற்றதால் கேதுவையும், கேந்திராதிபத்திய தோஷம் பெற்றதால் சுக்கிரனையும் ஒதுக்கலாம். மீதம் இருப்பது ராகு, மற்றும் சூரியன் மட்டுமே.  இவர்க்ளில் சூரியன் பூர்வ புண்ணியாதிபதியாகி, இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.  ஆகவே இந்த ஜாதகத்தில் முழுக்க முழுக்க யோக பலன் தரக்கூடியவர் சூரியன் என்றாகிறது.  எனவே பாரம்பரிய முறைபடி சூரியனை தேர்வு அத்துடன் ஜென்ம நக்ஷத்திரமான அனுஷம் 2ம் பாதத்துக்குரிய ஒலியாகிய ' நி ' ஒலிக்குமாறும்,  ந்யுமராலஜி முறைபடி சூரியனின் எண்ணான 1 வரும்படி, ப்ரொனாலஜி முறைபடி ஒரு தெய்வீகமான பெயரை சூட்டலாம். 

     ' நித்ய ஸ்ரீ '.  இது மஹாலக்ஷ்மியை நினைவூட்டும் பெயராக அமைகிறது.  நித்தி என்றோ, நித்யா என்றோ இப்பெயரை சுருக்காமல், ப்ரொனாலஜிபடி முழுமையாக அழைக்க வேண்டும் என்று இக்குழந்தையின் பெற்றோர் அறிவுருத்தப்பட வேண்டும்.  ந்யுமரலஜிபடி இப்பெயரின் கூட்டுத்தொகை 1 வரும். [ D. Nithya Sri = 4  592871 199.  இவைகளை கூட்டினால் 55 வரும்  இவற்றை கூட்டினால் 10 வரும்.  அவற்றை கூட்டினால் 1 வரும்.  ந்யுமராலஜிபடி தந்தையின் முதலெழுத்து சேர்க்கப்படுள்ளது. ]   .நித்ய என்றால் தினசரி என்று பொருள்.  ஸ்ரீ என்பது மஹாலக்ஷ்மியை குறிக்கும்.  தினமும் மஹலக்ஷ்மி போல் விளங்குபவள் என்ற பொருள்படும் படி அருமையான பெயரை இப்போது நாம் சூட்டியிருக்கிறோம்.  இக்குழந்தை பதினாறு பேறு பெற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்தி, இவ்வாறே பாரம்பரிய முறைபடியும், ந்யுமராலஜி முறைபடியும், ப்ரொனாலஜி முறைபடியும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டீ மகிழ்வோமாக.  நன்றி.  .

Friday 13 June 2014

மோக்ஷம். சொர்கம். நரகம்.



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  தற்போது வாசகர்களிடையே, தான் மோக்ஷம் அடைவேணா? என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது.  மோக்ஷம், சொர்கம், நரகம் என்ற வார்த்தைகளுக்கிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.  மோக்ஷம் என்பது மீண்டும் பிறவா நிலையாகும்.  சொர்கம் என்பது, தேவலோகம் அடைந்து பேரானந்தத்தில் திளைத்து, பின் மீண்டும் ஒரு பிறவி எடுப்பதாகும்.  நரகம் என்பது யமலோகம் அடைந்து கொடும் துன்பத்தை அனுபவித்து, பின் ஒரு பிறவி எடுப்பதாகும்.  இதில் மோக்ஷத்தை அடைந்தவர்கள் என்று அடையாளம் காண வேண்டுமானால், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மஹான்கள், சித்தர்கள், தவசிகள், யோகிகள் ஆகியோரை சொல்லலாம்.  ஸ்ரீ காரைக்காலம்மையார், தனது பதிகத்தில் இறைவனை நோக்கி ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.  இதை நாம் பெரிய புராணத்தில் படிக்கலாம்.  ' இறைவா! பிறவா நிலை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உனை மறவா நிலை வேண்டும் ', என்பதாகும் அது.  ஸ்ரீ காரைக்காலம்மையார் இறைவன் திருவருளால், தன் இளமையில் தன் பருவத்தை துறந்து, முதுமையடையும் வரம் பெற்றவர்.  63 நாயன்மார்களில் ஒருவர்.  அவருக்கே தனக்கு மோக்ஷம் கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்து பதிகம் பாடியிருக்கிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.

     ஸ்ரீ அருணகிரினாதர் தன் ' கந்தரலங்காரம் ' எனும் நூலில் ' சேல் பட்டழிந்தது, செந்தூர் வயல் பொழில்', என்று தொடங்கும் பாடலை எழுதும் போது, ' அவன் கால் பட்டழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே! ', என்று முடிக்கிறார்.  இறைவன் நினைத்தல் ஒருவர் பிறந்தஜாதகத்தையே, அவர் வாழும்போதே மாற்றியமைக்க முடிய்ம் என்பதர்கு இந்த கந்தரலங்காரம் சிறந்த உதாரணம்.  இப்படி நம் வாழ்க்கையில் நடக்குமா?  நடந்தால் நிச்சய்ம் நமக்கு மோக்ஷம்தான் என்பதில் ஐயமில்லை.  பிறந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு மோக்ஷம் கிடைக்குமா? என்று ஆராய்ந்துகொண்டிய்ருப்பதைவிட, அந்த ஜாதகத்தை மாற்றியமைக்கும் இறைவன் திருவடியை பற்றுதலே மோக்ஷம் அடைய சிறந்த வழியாகும்.

     சொர்கம்..  இது நம்மில் பலருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.  ஜாதகப்படி இதை அறிந்துகொள்ள முடியும்.  திரிகோண ஸ்தானங்களில், சுபக்கிரகனகளின் ஆதிக்கம் ஓங்கியிருந்து, பாபக்கிரகங்களின் ஆதிக்கம் மங்கியிருக்குமானால், அந்த ஜாதகருக்கு சொர்கம் நிச்சயம்.  இதே திரிகோணங்களில் பாபக்கிரகங்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்து, சுபக்கிரகங்களின் ஆதிக்கம் மங்கியிருந்தால் நரகம் நிச்சயம்.  திரிகோணங்களில் முழுக்க முழுக்க சுபர்களின் ஆதிக்கமோ, அல்லது பாபர்களின் ஆதிக்கமோ மட்டுமே இருக்கக்கூடிய ஜாதகத்தை பார்த்ததாக எனக்கு நினைவில்லை.  ஒரு வாசகர் மோக்ஷம் அடைய பரிகார வழிபாடு இருக்கிறாதா? என்று பதிவிட்டிருந்தார்.  அவருக்கு பதிலேதும் கிடைக்கவில்லை.  ஆனால் நர்கம் செல்லாமல் சொர்கம் செல்ல பரிகார வழிபாடு உண்டா? என்று கேட்டால் உண்டு என்று சொல்ல முடியும்.  அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.  அதை தொடர்ந்து பார்க்கலாம்.

     ஸ்ரீ மாணிக்கவாசகர், தமது திருவாசகத்தில், ' அவனருளாலே அவன் தாள் வணங்கி...............', என்று நமக்கு வழிகாட்டியிருக்கிறார்.  நாம் சொர்கம் அடையவேண்டுமென்றால் பரிகார வழிபாடு செய்யவேண்டும்.  இதை செய்யவும் நமக்கு இறைவன் திருவருள் இருக்க வேண்டும்.  அது இருக்கிறதா? இல்லையா? என்பதை பாக்கிய ஸ்தானம் காட்டி கொடுத்துவிடும்.  இந்த ஸ்தானமானது பாபர்கள் சம்பந்தம் பெற்று, சுப சம்பந்தம் அறவே இல்லையென்றால் நம் பரிகார வழிபாடுகள் எதுவும் செல்லுபடியாகாது.  சுப சம்பந்தம் இருப்பின் அந்த சுப சம்பந்த கிரகம் ஆதிக்கம் பெறும் காலத்தில் நாம் பரிகார வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.  ஜாதகப்படி, திகோணங்களிலுள்ள பாபக்கிகங்களின் ஆதிக்கத்தை கணக்கெடுத்து, அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.  அப்பொழுதுதான் பாபச்சுமை குறையும்.  இந்த பாபக்கிரகங்களின் காரகத்துவப்படி, நாம் ஆற்ற வேண்டிய புண்ணிய, தர்ம செயல்களை செய்து வருவதே பரிகார வழிபாடாகும்.  உதாரணத்திற்கு பாக்கிய ஸ்தானமானது சந்திரன் பாபசம்பந்தம் பெற்றால், நாம் பெற்ற தாயாருக்கும், தாயாராக மதிக்க தகுந்தவர்களுக்கும் சேவை செய்வதும், சிவபெருமான் கோவில் ஸ்ரீ அம்பாளை வழிபட்டு வருவதுமாகும்.  பொதுவாக வாழ்க்கையில் புண்ணிய, தர்ம செயல்களை செய்தாலே சொர்கத்துக்கான கதவு திறந்துவிடும்.  அதற்கு இறைவன் திருவருள் புரிவானாக.  நன்றி.