Wednesday 20 January 2016

ஜாதகம் சரியானதா? தவறானதா? .



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  ...................  ஜாதகம் சரியானதா? தவறானதா? .....  கணிப்பது எவ்வாறு? .......  ஜோதிடர்களுக்கான பதிவு.  ......  பாரம்பரிய முறை.  ......  மேலும் ஜாதகர்களும் இந்த க்ட்டுரையை பொறுமையுடன் படிக்க வேண்டும்.  அப்போதுதான் சாஸ்த்திரப்படி, ஒரு ஜாதகம் கணித்து எழுதுவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளன என அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும்.  கணிணிகள் ஜாதகத்தை சாஸ்த்திரப்படி கணிப்பதில்லை.  ஜோதிடம் பார்க்க நம்மிடம் வரும் ஜாதகம், எழுதப்படும் போது தவறாக எழுதப்பட்டிருக்கலாம்.  அல்லது பெற்றோர்கள் தவறான தேதி, நேரம் தெர்வித்து, ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருந்தாலும், அது தவறான ஜாதகமாகும்.  எனவே எழுதப்பட்ட ஜாதகத்தை அப்படியே நம்பி நாம் பலன் சொல்லும்போது, அந்த பலன்கள் தவறிப்போக வாய்ப்பிருக்கிறன.  இதை தவிர்க்க ஜாதகத்தை பரிசோதிப்பது அவசியமாகிறது.  பரிசோதிப்பதற்கான வழிமுறைகள் சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறன.  அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.  தவறாக எழுதப்பட்ட ஒரு ஜாதகத்தின் கையெழுத்து பிரதியும் இந்த பதிவுடன் வெளியிடப்பட்டுள்ளது.  ஜாதகத்தில் பெற்றோரின் பெயர்கள் மட்டும் அழிக்கப்பட்டிருக்கிறன.  இந்த ஜாதகம் எவ்வாறு தவறு? என்று ஆராய்வோம்.

இந்த ஜாதகத்தில் அடித்தல் திருத்தலுடன் மூன்று விதமான ஆங்கில தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இதில் எது உண்மை?  கணிணியில் சரிபார்க்க வேண்டுமென்றால் எந்த தேதியை தரவிடுவது?  எனவே தமிழ் தேதிக்கு சரியான ஆங்கில தேதியை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.  தமிழ்தேதி: ..........  அக்ஷய வருஷம் ஆனி மாதம் 30 ஆம் தேதி, திங்கட்கிழமை மாலை மணி 4.30 க்கு கும்பகோணத்தில் ஜனனம்.  இதன்படி பார்த்தால் சரியான ஆங்கில தேதி 14.07.1986 ஆகும்.  எனவே ஜாதகத்தில் குறிக்கப்பட்டுள்ள ஆங்கில தேதிகள் அனைத்தும் தவறு.  சரி, தேதி, மாதம், கிழமை பார்த்தாகிவிட்டது.  இனி பிறந்த நேரம் சரிபார்க்க வேண்டும்.  பார்க்கலாம்.  ..................

பிறந்த நேரம் சரிபார்க்க "ஜாதக அலங்காரம்" ஒரு சூத்திரத்தை சொல்கிறது.  ....................  உதயாதி நாழிகையை 12 ஆல் வகுத்து ஈவை தள்ளிவிட்டு, மீதியை மேஷம் முதல் எண்ணிவர வருகின்ற ராசி எதுவோ அதுவே லக்னமாக அமையும்.  அல்லது அதன் திரிகோணங்கள் லக்னமாக அமையும்.  அல்லது எண்ணி வருகின்ற ராசி எதுவோ அதன் ஏழாமிடம் அல்லது அதன் திரிகோணங்கள் லக்னமாக அமையும்.  இதன்படி அமையவில்லை என்றால் ஜாதகத்தில் கணிக்கப்பட்டுள்ள பிறந்த நேரம் தவறாகும்.  இனி இந்த சூத்திரப்படி உதாரண ஜாதகத்தை கணிக்கலாம்.

பிறந்த நாளன்று சூரிய உதயம், அஸ்ட்ரோவிஷன் திருக்கணித மென்பொருளின்படி காலை மணி 5.57.  பிறந்த நேரம் மாலை மணி 4.30 என்பதால் சூரிய உதயாதி நாழிகை 26.23 ஆகும்.  ஆனால் ஜாதகத்தில், 25.30 என்று கொடுக்கப்பட்டுள்ளது.  எனவே ஜாதகத்தில் கணித பிழை உள்ளது.  பெற்றோர்கள் நேரம் தெரிவிக்கும்போது நாழிகையில் தெரிவிப்பதில்லை.  மணியில் தெரிவிக்கிறனர்.  எனவே நாம் மணியையே முதன்மையாக கொள்ளலாம்.  ஆகவே சூரிய உதயாதி நாழிகை 26.23 எனக்கொள்வோம்.  இதை 12 ஆல் வகுக்க ஈவு போக மீதி 2.23 வரும் இதை முழுமையாக்கினால் 3 என ஆகும்.  ஆகவே மேஷம் முதல் எண்ணிவர லக்னம் மிதுனம் அல்லது அதன் திரிகோணங்களான துலாம், கும்பம் அல்லது மிதுனத்தின் ஏழாமிடமாகிய தனுசு, அதன் திரிகோணங்களாகிய மேஷம், சிம்மம் ஆகியனவற்றில் ஒன்றாக அமைய வேண்டும்.  ஆனால் கணித்துப் பார்த்தால் விருச்சிகம் லக்னமாக அமைகிறது.  எனவே பிறந்த நேரம் தவறாக இருக்கலாம்.  எனவே அவசரப்பட்டு முடிவெடுக்காமல் மேலும் ஆராய்வோம்.

லக்னம் லக்னசந்தியில் அமைந்திருப்பதை பார்க்கலாம்.  லக்னம் விருச்சிகத்தின் கடைசி பகுதியான 28.41 பாகையில், கேட்டை 4 ஆம் பாதத்தில் உள்ளது.  எனவே இதையும் சரி செய்தால் நமக்கு சரியான லக்னம் கிடைத்துவிடும்.  சூத்திரப்படி ஒருவேளை இது தனுசு லக்னமாகவும் இருக்கலாம்.  எனவே இதை கணித்துப்பார்க்க நமக்கு ஸ்த்ரி / புருஷ காலம் உதவுகிறது.  { இந்த ஸ்த்ரி / புருஷ காலம், ஜாதகம் கணிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  ஜோதிட பலன் சொல்வதற்கல்ல. ].  திங்கட்கிழமை உதயாதி நாழிகை 26.15 முதல் 27.30 வரை புருஷகாலம் அமைகிறது.  எனவே நாம் லக்னத்தை தனுசுக்கு நகர்த்தலாம்.  பிறந்த நேரத்துடன் 7 நிமிஷங்களை கூட்டினால் லக்னம் தனுசுக்குள் வந்துவிடும்.  இப்போது மீண்டும் பிறந்த நேர சோதனை செய்தாக வேண்டும்.  பிறந்த நேரம் மாலை மணி 4.37 படி உதயாதி நாழிகை 26.41  இதை 12 ஆல் வகுக்க ஈவு போக மீதி 2.41  இதை முழுமையாக்கினால் 3 வரும்.  மேஷம் முதல் எண்ணிவர 3 ஆவது ராசி மிதுனம்.  அதன் ஏழாமிடம் தனுசு என்பதால் பிறந்த நேரம் மாலை மணி 4.37 என்றும், லக்னம் தனுசு என்றும் உறுதியாகிறது.  எனவே ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ள விருச்சிக லக்னம் தவறு.  இதன்படி அக்ஷய வருஷ ஆனி 30 ஆம் தேதி திங்கட்கிழமைக்கான ஜென்ம நக்ஷத்திரம் ஹஸ்தம் 4 ஆம் பாதமாகும்.  இப்போது நாம் கணித்த ஜாதகத்தில் இன்னொரு சிக்கல் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.  அதுவே " நக்ஷத்திரசந்தி ", எனப்படும்.  தனுசுலக்னத்தில் புருஷகாலம் முடிவதற்குள் சித்திரை 1 ஆம் பாதம் பிறந்துவிடுகிறது.  எனவே இதையும் சரி செய்ய வேண்டும்.

சூத்திரப்படி தனுசின் இறுதி நாழிகை 27.00 ஆகும்.  அப்போதுதான் மீதி 3 கிடைக்கும்.  எனவே உதயாதி நாழிகையின் தொடக்கம் 26.41 முதல் 27.00 க்குள் தனுசு லக்னமும் புருஷகாலமும் இணைந்து அமைகிறது.  ஹஸ்தம் 26.58 வரை உள்ளது.  பெரும்பான்மை நாழிகை ஹஸ்தத்திற்கே கிடைப்பதால், நக்ஷத்திர சந்தி இருந்தாலும் ஹஸ்தம் 4 ஆம் பாதம் சரியானதாகும்.  இப்போது நாம் முடிவுக்கு வந்து விடலாம்.  ஜாதகம் கையால் எழுதி கணித்த ஜோதிடர் அதை " குட்டிச்சுவர் ", ஆக்கியிருக்கிறார்.  ஆங்கிலதேதி, பிறந்த நேரம், லக்னம், நக்ஷத்திரம், ராசி மற்றும் கட்டங்களில் கிரகங்களின் இருப்பு, ஆகியன எல்லாமே தவறாக இருக்கிறது.  இந்த ஜாதகத்தை கொண்டு இத்தனை நாட்கள் வரை பலன் பார்த்திருக்கிறார்கள்.  எதுவும் சரியாக வரவில்லை என்பது பெற்றோரின் வாக்குமூலம்.  தவறான ஜாதகத்தை கொண்டு பலன் பார்த்தால், தவறாகத்தானே இருக்கும்.  சரியான ஜாதக தகவல் கீழே தரப்பட்டுள்ளது.

பிறந்த நாள்: ...........  14.07.1986.  அக்ஷய வருஷம் ஆனி மாதம் 30 ஆம் தேதி.  திங்கட்கிழமை.  பிறந்த நேரம்: .................  மாலை மணி 4.37.  ராசி கன்னி.  நக்ஷத்திரம் ஹஸ்தம் 4 ஆம் பாதம்.  லக்னம் தனுசு.  பிறந்த ஊர்: ........... கும்பகோணம்.  இதன்படி ஜாதகம் கணித்தெழுதி பலன் சொன்னால் மிக சரியாக அமையும்.  அமைந்தது.  நன்றி.  வணக்கம். 

         

Thursday 7 January 2016

எளிய வழிமுறையில் ரஜ்ஜுப்பொருத்தம்.



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  ............  எளிய வழிமுறையில் ரஜ்ஜுப்பொருத்தம்.  ...................  ஜோதிட ஆர்வலர்களுக்கான பதிவு.  ..........................  பாரம்பரிய முறை.  ..............  திரு அவர்கள், ரஜ்ஜுபொருத்தத்தில் ஆரோகணம், அவரோகணம் பற்றி விளக்கம் தாருங்கள் என கேட்டிருந்தார்.  அவருக்காகவும் இந்த பதிவு இடப்படுகிறது.  முதலில் ரஜ்ஜு பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை என்பதற்கான விதி முறையை பார்க்கலாம். 

பொருத்தம் பார்க்கும் இரு ஜாதக நக்ஷத்திரங்களின் ராசியதிபதிகள், ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜு பொருத்தம் பார்க்காமலேயே அப்பொருத்தம் உண்டு எனக்கொள்ளலாம்.  அதுபோல். இவ்விரு ஜாதக நக்ஷத்திரங்களின் ராசியதிபதிகள், இருவராக அமைந்து, அவர்கள் நட்புடன் இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் பார்க்காமலேயே உண்டு என கொள்ள வேண்டும்..  மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகியவை, விவாஹதசவித பொருத்த சாஸ்த்திரப்படி, மஹா நக்ஷத்திரங்கள் என்பதால், இந்த நக்ஷத்திரங்களில் ஒன்று ஒரு ஜாதகருக்கு  இருந்தாலும், ரஜ்ஜு பொருத்தம் பார்க்கவேண்டியதில்லை.  அப்பொருத்தம் உண்டு என கொள்ள வேண்டும்..

இனி அடுத்த விதிமுறை.  .......................  பொருத்தம் பார்க்கப்படும் இரு ஜாதகங்களின் நக்ஷத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் ரஜ்ஜுபொருத்தம் இல்லை.  ஆனால் ஒரே ரஜ்ஜுவில் இருக்கும் இருவர் நக்ஷத்திரங்களில் ஒன்று ஆரோகணத்திலும், இன்னொன்று அவரோகணத்திலும் இருந்தால் ரஜ்ஜுப்பொருத்தம் உண்டு.  { முக்கிய குறிப்பு:  ..................  இரு ஜாதகங்களின் ராசிகள் ஒன்றுகொன்று சப்தமமாக இருந்தால், ரஜ்ஜுப்பொருத்தம் தானாகவே அமைந்துவிடும்.  }

 இனி உதாரணங்களுடன் பார்க்கலாம்.  இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.  இடப்பக்கத்திலிருந்து, வலப்பக்கமாக வரிசையாக நக்ஷத்திரங்களின் பெயர்கள் உள்ளன.  கடைசியில் ரஜ்ஜுவின் பெயர் உள்ளது.  அது போல் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும், முறையான நக்ஷத்திர வரிசை அமைக்கப்பட்டிருக்கிறது.  எது கீழிருந்த் மேல், எது மேலிருந்து கீழ் என்பதை அறிய, அருகிலேயே அம்புக்குறிகள் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் அடையாளமாக இடப்பட்டிருக்கிறன.  கீழிருந்து மேலாக செல்லும் வரிசை ஆரோகணம் எனப்படும்.  மேலிருந்து கீழாக வரும் வரிசை அவரோகணம் எனப்படும்.

பெண்ணின் நக்ஷத்திரம் பரணி எனவும், ஆணின் நக்ஷத்திரம் பூரம் எனவும் கொள்வோம்.  பெண்ணின் ராசியதிபதி செவ்வாய்.  ஆணின் ராசியதிபதி சூரியன்.  இருவரும் நட்பு எனவே ரஜ்ஜுப்பொருத்தம் உண்டு.  தனித்தமுறையில்  ரஜ்ஜுப்பொருத்தம் பார்த்தால், இவ்விரு நக்ஷத்திரங்களுக்கு ரஜ்ஜு பொருத்தம் இல்லை.  1.  இரு நக்ஷத்திரங்களும் கீழிருந்த மேலாக செல்லும் ஆரோகணத்தில் உள்ளன.  2.  இவ்விரு நக்ஷத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவான தொடை ரஜ்ஜுவில் உள்ளன.  இப்படி ரஜ்ஜு சேராத காரணங்கள் இருந்தாலும், ராசியதிகள் நட்பு என்பதால் ரஜ்ஜுபொருத்தம் பார்க்காமல் உண்டு என கொள்ள சொல்கிறது சாஸ்த்திரம். 

இரு ஜாதகங்களின் நக்ஷத்திரங்களின் ராசியதிபதிகள் ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜு பொருத்தம் உண்டு என கொள்ள வேண்டும்.  இவை ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும், ராசியதிபதிகள் ஒருவரே என்பதால் ரஜ்ஜு பொருத்தம் உண்டு..

இனி பெண்ணின் கிருத்திகை 1 ஆம் பாதத்தோடு, ஆணின் உத்திராடம் 2 ஆம் பாதத்துக்கு ரஜ்ஜுப்பொருத்தம் பார்ப்போம்.  செவ்வாய் பெண்ணுக்கும், சனி ஆணுக்கும் ராசியதிபதிகள்.  இருவரிடையே நட்பு இல்லை.  அடுத்து நக்ஷத்திராதிபதி இருஜாதகங்களிலும் சூரியனாகிய ஒருவரே ஆவார்.  ஆகையால் அடுத்து பார்த்தால், இரு நக்ஷத்திரங்களும் ஆரோகணத்தில் உள்ளன.  மேலும் இவ்விரு நக்ஷத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவான உதரரஜ்ஜுவை சேர்ந்தவை.  இப்படி எந்த வகையில் பார்த்தாலும் ரஜ்ஜுபொருத்தம் இல்லாமல் போவதால் இவ்விரண்டுக்கும் ரஜ்ஜுபொருத்தம் இல்லவே இல்லை என்று முடிவு செய்யலாம்.

சுருக்கமானக சொன்னால்.  .........................  முதலில் இரு ஜாதகங்களின்  ராசியதிபதிகளை கவனியுங்கள்.  இருவரும் நட்பாகவோ, அல்லது ஒரே கிரகமாகவோ அமையவில்லை என்றால், இருவர் நக்ஷத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவில் இருக்க்றதா? எனப்பாருங்கள்.  இருக்ககூடாது.  ஒருவேளை இருந்தால் அடுத்து ஆரோகணம் அவரோகணம் கவனியுங்கள்.  இரு ஜாதக நக்ஷத்திரங்களும், ஒரு சேர ஆரோகணத்திலோ அல்லது அவரோகணத்திலோ இருந்தால், அவ்விரு ஜாதகங்களிடையே ரஜ்ஜு பொருத்தம் இல்லவே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.  நன்றி வணக்கம். 



         

விவாஹதசவித பொருத்த விளக்கப்பதிவு. ............ நிறைவுப்பகுதி எண். 6.



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  ....................  விவாஹதசவித பொருத்த விளக்கப்பதிவு. ............ நிறைவுப்பகுதி எண். 6. .............. பாரம்பரிய முறை. ................  கடந்த 5 பகுதிகளில் மிக முக்கியமான பொருத்தங்களை பற்றி பார்த்திருக்கிறோம்.  இப்படி பார்த்தவைகளை கொண்டு இரு ஜாதகங்களை இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்து விடமுடியும்.  அதை ஒரு முறை சுருக்கமாக பார்த்துவிடலாம்.  தசவிதம் என்றாலே பத்துவகை என்று பொருள்.  இந்த பத்தில் மிகமிக முக்கியமானவைகளாக தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகியனவற்றை நமது சாஸ்திரம் அடையாளம் காட்டுகிறது.  இவற்றில் ஒன்று குறைந்தால் கூட அந்த ஜாதகங்களை கண்டிப்பாக இணைக்கக்கூடாது.  இதற்கு மேலுள்ள மற்ற பொருத்தங்கள் எத்தனை பொருந்துகிறதோ, அந்த பொருத்தங்களை நாம் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம்.  மேற்கண்ட ஐந்து பொருந்தினால், மற்ற ராசியதிபதி, வேதை ஆகிய இரண்டும் எளிதாக பொருந்திவிடும்.  இப்படி பொருத்தம் பார்ப்பது ஒரு முறை.  இனி இன்னொரு முறையும் பார்ப்போம்.  தினம், யோனி, ராசியதிபதி ஆகியன பொருந்தினால் போதும்.  ராசியதிபதி பொருந்தினால், கணம், ராசி, ரஜ்ஜு, வேதை ஆகியன பார்க்கவேண்டியதில்லை என்பதால், மொத்தம் ஏழு பொருந்தியதாக ஆகிவிடும்.  இதற்கு மேல் மீதம் உள்ளவற்றின் பொருத்தம் பார்த்து, அவற்றை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதில் தினம், அல்லது யோனி மட்டும் பொருந்தவில்லை என்றால் கூட அந்த ஜாதகங்களை இணைக்கக்கூடாது.  ராசியதிபதி பொருந்தவில்லை என்றால், கணம், ராசி, ரஜ்ஜு, வேதை ஆகியனவற்றை தனித்தனியாக பார்த்து பொருத்த வேண்டும்.  இனி இன்னொரு முக்கியமான விதி இருப்பதையும் பார்த்துவிடலாம்.

மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகியவை, விவாஹதசவித பொருத்த சாஸ்த்திரத்தின் சிறப்பு நக்ஷத்திரங்களாகும்.  பொருத்தம் பார்க்கும் இரு ஜாதகங்களில் ஒரு ஜாதகத்திற்கு மேற்கண்ட நக்ஷத்திரம் அமைந்திருந்தால், விவாஹதசவித பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம்.  பத்து பொருத்தங்களும் பொருந்தியதாக கொள்ள வேண்டும்.  இப்படி பொருத்தங்கள் பார்த்துவிட்டதோடு, கடமை முடிந்துவிடவில்லை.  இதற்குபின், ஜாதகத்தில் சர்ப்பதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளனவா? என்று ஆராய்தல் முக்கியம்.  அதன் பின் ஜாதககட்ட பொருத்தமும் பார்க்க வேண்டும்.  அப்போதுதான் நாம் பொருத்தத்தை முழுமையாக பார்த்ததாக ஆகிறது.  இப்படி முழுமையாக பொருத்தம் பார்க்கப்பட்ட ஜாதகர்களே ஒரு குறையுமின்றி, சிறப்பான வாழ்க்கை வாழமுடியும்.  இப்படிப்பட்ட முழு கவன பொருத்தம், திருமண அட்டவணைகளில் நிச்சயமாக கிடைப்பதில்லை.  உதாரணத்திற்கு, சிறப்பு நக்ஷத்திரங்களின் பெயர்கள், பொருத்தாத நக்ஷத்திரங்கள் என்ற வரிசையில் அட்டவணையில் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் சாதாரணமாக காணமுடியும்.  இதிலிருந்து அட்டவணையை எந்த அளவு நம்பலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  திருமணமான பின்பு விவாஹதசவித பொருத்தம் பார்த்தத்தில் தவறு இருப்பது தெரியவந்தால், அதை சரி செய்துகொள்ள முடியவே முடியாது.  அதற்கான பரிகாரவழிமுறைகள் எதுவும் சாஸ்த்திரத்தில் சொல்ல்ப்படவில்லை.  இனி மீதம் பார்க்கப்படவேண்டிய பொருத்தங்களான, மாஹேந்திரம், ஸ்த்ரிதீர்க்கம், வசியம், வேதை ஆகிய பொருத்தங்களை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய செல்வசெழிப்புகளை மாஹேந்திர பொருத்தம் அடையாளம் காட்டும்.  ஸ்த்ரீதீர்க்க பொருத்தம் என்பது பெண்ணின் ஆயுள் பலத்தோடு தீர்க்கசுமங்கலித்துவத்தை அறிவிக்கும்.  ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்பால் ஒருவருக்குள்ள ஈர்ப்பை குறிப்பிடுவது வசியப்பொருத்தம்.  தம்பதிகளில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை குறிப்பிடுவது வேதைப்பொருத்தம்.  இப்போது சொல்லப்பட்ட பொருத்தங்கள் பொருந்தினாலும், இல்லையென்றாலும் கவவையில்லை.  அவைகள் எண்ணிக்கையில் கூடும் அல்லது குறையும்.  இவைகள் மட்டுமில்லாமல் நாடிப்பொருத்தம் உள்ளது என்று சொல்வாருண்டு.  சாஸ்த்திரத்தில் மொத்தம் 21 பொருத்தங்கள் குறிப்பிடப்படுகிறன.  இவைகளில் முதன்மையானவை விவாஹதசவித பொருத்தங்கள் மட்டுமே.  இந்த பத்து பொருத்தங்களை பற்றி விரிவாக விளக்கமாக, மொத்தம் ஆறு பதிவுகளில் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.  பதிவுகளை ரசித்து விமர்சித்த அனைவருக்கும் என் நன்றியறிதலை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த பதிவுகளில் சொல்லப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் சிந்தித்துப்பார்த்து, விவாஹதசவித பொருத்த அட்டவணைகளை நம்புவதா? அல்லது வேண்டாமா? என்ற ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன்.  சரியான துணையை தேர்வுசெய்து வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள இறைவன் திருவருளை நாடி பிரார்த்தனை செய்துகொள்வோம்.  நன்றி வணக்கம்.     

விவாஹ தசவித பொருத்த விளக்கம். ... தொடர்பதிவு எண். 5.



ம் படைவீட்டம்மா துணை.  வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  .....................  விவாஹ தசவித பொருத்த விளக்கம். ...........................  தொடர்பதிவு எண். 5. ....................  பாரம்பரிய முறை.  .................  " ராசி மற்றும் ராசியதிபதி பொருத்தங்கள். " ...............  இவ்விரு பொருத்தங்களையும் ஒன்றாக பதிவிடுவதில் முக்கிய காரணங்கள் அடங்கியுள்ளன.  இவ்விரு பொருத்தங்களும், புத்திர பாக்கியம் பற்றி தெரிவிப்பவை.  ஆனால் ஒரு நுணுக்கமான வித்தியாசம் இரண்டுக்கும் உண்டு.  ராசிப்பொருத்தத்தின் மூலம் சந்ததியை பற்றி அறியலாம்.  ராசியதிபதி பொருத்தத்தின் மூலம் வம்சத்தை பற்றி அறியலாம்.  வம்சம் என்பது குலம், கோத்திரத்தை பற்றி குறிப்பது.  எனவே மஹாகவி காளிதாசர் தன்னுடைய நூலுக்கு " ரகுவம்சம் ", என்று பெயரிட்டார்.  அந்த வம்சத்தில் வழிவழியாக பிறந்தவர்களின் வரலாற்று தொகுப்பு உடைய நூல் அது. அந்த வம்சாவழியாக வந்தவர் ஸ்ரீராமர்.  ஒரு தம்பதியர் ஆண் குழந்தை பெற்றெடுத்து, அந்த ஆண் குழந்தைக்கு திருமணமாகி, அவனுக்கு ஆண் குழந்தை பிறந்து................  இப்படி வாழையடி வாழையாக ஆண் குழந்தை பிறந்து கொண்டே வருவது வம்சவிருத்தியாகும்.  இதனால் குலம், கோத்திரம் ஆகியன ஒருவனால் வளர்ச்சியடைகிறது.  குழந்தைகள் பிறந்தாலும், வம்சவிருத்தியில் தடை ஏற்படுவதுண்டு.  அதாவது, பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது, அல்லது பிறந்த ஆணுக்கு விவாஹப்ராப்தம் இல்லாமல் போவது.  அல்லது அந்த ஆணுக்கு புத்ரபாக்கியமே கிடைக்காமல் போவது.  இவைகளால் வம்சம் வளராமல் தடைபட்டு போகும்.  குழந்தைகள் இருந்தும், அதனால் வம்சவிருத்தி இல்லையென்றால், அது சந்ததி என்று சொல்லிக்கொள்ளாலாமே ஒழிய, வம்சம் என்று சொல்ல இயலாது.  ராசிப்பொருத்தம் சந்ததியையும், ராசியதிபதி பொருத்தம் வம்சத்தையும் குறிக்கும்.  எனவேதான், ராசியதிபதி பொருத்தம் இருந்தால், ராசிப்பொருத்தம் இருப்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்த்திரங்கள் சொல்லுகிறன.  எனவே விவாஹ தசவித பொருத்தம் பார்க்கும்போது, முதலிடம் ராசியதிபதி பொருத்தத்துக்கு தர வேண்டும்.  இந்த பொருத்தம் ஒன்று இருந்துவிட்டால், ராசி, ரஜ்ஜு, கணம், வேதை ஆகிய பொருத்தங்கள் இல்லையென்றாலும் இருப்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ராசியதிபதி பொருத்தம் இருந்தால் அதோடு மேற்கூறிய பொருத்தங்களும் சேர்த்து மொத்தம் 5 பொருத்தங்கள் பொருந்திவிடுகிறன.  ராசியதிபதி பொருத்தம் இல்லையென்றால், ஒவ்வொரு பொருத்தத்தையும் தனித்தனியாக பார்த்தாக வேண்டும்.  விவாஹ தசவித பொருத்த அட்டவணைகள், இந்த அளவுக்கு கவனமுடன் தயாரிக்கப்படுவதாக தெரியவில்லை.

ராசியதிபதிகள், இருவர் ஜாதகத்திலும் ஒருவராக இருக்க வேண்டும்.  அல்லது ஒருவருக்கொருவர் நட்பாக இருக்க வேண்டும் என்பது ராசியதிபதி பொருத்தத்தின் முக்கிய விதியாக கருதப்படுகிறது.  ராசியதிபதிகள் ஒருவருக்கொருவர் நட்பானால், அவர்கள் பெரும்பாலும் திரிகோணாதிபதிகளாக இருப்பர்.  திரிகோணங்களான 1, 5, 9 நட்பானால், புத்திரபாக்கிய தடை இருக்காது.  இருஜாதக ராசியதிபதிகள் ஒருவராகவே இருந்துவிட்டால், தனக்குதானே கெடுதல் செய்துகொள்வதில்லை.  எனவே இதில் சஷ்டாஷ்டக தோஷம், த்வித்வாதச தோஷம் ஆகியன அடிபட்டுப்போகிறன.  ஆனால் ராசிப்பொருத்தம் பார்த்தாக வேண்டிய சூழ்னிலை ஏற்படும்போது, தனிப்பட்ட முறையில் மேற்கண்ட இருவகை தோஷங்களையும் கவனிக்க வேண்டும்.  ஜோதிட ஆர்வலர்கள் மிக எளிதாக மேற்கண்ட தோஷ விதிவிலக்கு கிரக நிலைகளை நினைவில் வைத்துக்கொள்ள வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

சஷ்டாஷ்டக தோஷ விதிவிலக்கு.. ......................  ராசிகளில் ஆண், பெண் என்று இருவகை உண்டு.  சஷ்டாஷ்டகம் என்றால், பெண் ஜாதகராசியும், ஆண் ஜாதகராசியும் ஒன்றுகொன்று ஆறுக்கெட்டாக அமைவது.  ராசிப்பொருத்தம் பார்க்கும்போது, பெண் ஜாதக ராசி ஆணாக இருந்தால், அதோடு இணையும் ஆண் ஜாதக ராசி பெண்ணாக இருந்தால் சஷ்டாஷ்டகதோஷம் இல்லை.  .........................  த்வித்வாதச தோஷ விதிவிலக்கு.  .....................  த்வித்வாதசம் என்றால், பெண் ஜாதகராசியும், ஆண் ஜாதகராசியும் இரண்டுக்கு பனிரண்டாக அமைவது.  பெண் ஜாதக ராசி பெண்ணாக இருந்து, அதோடு இணையும், ஆண் ஜாதக ராசி ஆணாக அமைந்தால் த்வித்வாதசதோஷம் இல்லை.  ராசிப்பொருத்தத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது.  சூரியனும் சனியும் ஜென்மபகைவர்கள் என்பதால், சிம்மராசியோடு மகர,, கும்பராசிகளை, எந்த விதிவிலக்கு காரணத்தையும் ஆதாரமாக காட்டி இணைத்துவிடவே கூடாது.  இதில் சிம்மராசிக்குரிய மகம் மட்டும் மகர, கும்பத்துடன் விவாஹதசவித பொருத்தம் எதுவும் பார்க்காமல் இணைக்கலாம் என்று சாஸ்திரம் அனுமதிக்கிறது.  இவ்வளவு நுட்பமாக கணிக்கப்படும் விவாஹதசவித பொருத்த அட்டவணை இன்று வரை என் கண்ணில் படவில்லை.  எனவே வாசகர்களே, அட்டவணையை நம்பி, பொருத்தம் பார்க்கும் ஜாதகத்தை அவசரப்பட்டு தள்ளுவதும், கொள்ளுவதும் ஆகாது என்று என் வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.  நன்றி.  வணக்கம். ....................................  தொடரும்.  ...................