Tuesday 7 February 2017

" கிரகணதோஷம் ", 2 ஆவது பகுதி.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட ஆர்வலர்களுக்கு வணக்கம்.  " கிரகணதோஷம் ", 2 ஆவது பகுதி.  : ...  பாரம்பரிய முறை : .......  சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது, அதை நம் கண்ணால் பார்க்க முடிகிறது.  கிரகண நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனின் ஒளிக்கதிர்கள் முழுமையாக நமக்கு கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.  அந்த கதிர்கள் கூட ஒளிச்சிதறல்களாகி, ஒழுங்கற்ற முறையில் நம்மை வந்தடைகிறன.  இதனால் கெடுதல்கள் விளைகிறன.  இந்த கெடுதல்கள் எப்படிப்பட்டவை? என்று, கிரகண நேரத்தில் விண்வெளிக்கு சென்று ஆராயும் விஞ்ஞானிகள் இன்றும்கூட இருந்துகொண்டு இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அதன் ஜாதகத்தில், சூரிய சந்திரர்களுடன் நிழல்கிரகங்கள் மிக நெருக்கமான பாகை அளவில் சம்பந்தப்பட்டிருக்கும்.  சூரிய கிரகணம் என்றால், சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது ஆகிய 3 கிரகங்களும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான பாகை அளவிலிருக்கும்.  சந்திர கிரகணம் என்றால், சூரியனுக்கு சமசப்தமமாக எதிரே சந்திரன் இருக்க, சூரியனோடும், சந்திரனோடும், நிழல் கிரகங்கள் மிக நெருக்கமான பாகை அளவில் அமைந்திருக்கும்.  அறிவியலின்படி பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3ம் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்.  எனவே ஒரு ஜாதகத்தில், சூரிய சந்திரர்களுடன் நிழல்கிரகங்கள், பாகை அளவில் 3 பாகை 20 கலை [ ஒரு நக்ஷத்திர பாதம் அளவு ] அளவில் நெருங்கியிருந்தாலொழிய, ஒரே ராசியில் இருப்பதால் கிரகணதோஷம் விளையாது என்பதை புரிந்துகொள்ளலாம்.  இந்த கிரகங்கள் அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட அளவில் நெருங்கினால் கிரகணதோஷம் விளையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கிரக அமைப்பு இருந்தாலும் பல சமயங்களில் கிரகணம் விளைவதில்லை.  எனவே மேற்கண்ட கிரக அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் மட்டும் போதாது.  அந்த நேரத்தில் கிரகணமா? இல்லையா? என்று, ஜாதகர் பிறந்த வருஷத்திய பஞ்சாங்கம் கொண்டு அறிதல் அவசியமாகிறது.  அல்லது ஜோதிடர் பஞ்சாங்க கணிப்பை அறிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது.  ஆனால் பல ஜோதிடர்கள் இவற்றை தவிர்த்துவிட்டு, நிழல்கிரகத்தோடு, ஒரு கிரகம் ஒரே ராசியில் இருந்தால் கிரகணதோஷம் என்று தோஷத்திற்கான பலனை சொல்லி வருகிறார்கள்.  ஜாதகத்தை கொண்டு, தொலைனோக்கு பார்வையுடன், தன் வாழ்க்கையில் ஒரு நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் ஜாதகருக்கு, இவ்விதமாக பலன் சொல்வதால், அது அவர் வாழ்க்கையையே ஏறுக்கு மாறாக புரட்டி போட்டுவிடும்.  ஜோதிட கணிதத்தோடு, பஞ்சாங்க கணிதத்தையும் கணிக்கும் பொறுப்பும், நுணுக்கமும் போதிக்கும் அவசியம் ஏற்படுவதால், கிரகணதோஷம் பற்றிய செய்திகளை பல நூல்கள் சொல்லாமல் விட்டுவிட்டன.  ஒரு ஸ்தானத்தில் நிழல்கிரகம் இருந்தால், நிச்சயம் அந்த ஸ்தானம் பாதிப்படையும்.  எனவே சில நூல்கள் அந்த பாதிப்புகளை விவரிப்பதோடு நிறுத்திக்கொண்டன.  இனி மற்ற கிரகங்களோடு, நிழல்கிரகங்கள் எப்படி தொடர்பு கொண்டு கிரகணதோஷம் விளைவிக்கிறன? என்று விரிவாக பார்க்கலாம்.

சந்திரனை தவிர மற்ற கிரகங்களில் பூமிக்கு மிக அருகாமையில் இருப்பது சுக்கிரன்.  வெகுதொலைவில் இருப்பது சனி.  சுக்கிரனுக்கென்று நிழல் இருந்தாலும் அது பூமி மீது அதிகமாக விழுவதில்லை.  சுக்கிரன் அளவில் மிக சிறியதாகி போனதால், சூரியனை மறைத்து பெரிய அளவில் உருவாகும் நிழலை கொண்டதாக இல்லை.  சனி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே அமையால் வெளிப்புறத்தில் அமைந்து போனதால், அதன் நிழல் வெளிப்புறத்திலேயே விழும்.  பூமி மீது விழ வாய்ப்பே இல்லை.  இருப்பினும் நிழல்கிரகங்களாகிய ராகுவும், கேதுவும், சுக்கிரன், சனி மற்றும் ஏனைய கிரகங்களின் ஒளிக்கதிர்களை பாதிப்படைய செய்கிறன.  சனியிலிருந்து வரக்கூடிய முழுமையான சனிக்கதிர்கள் நமக்கு பெரும்பாலும் கெடுதலையே செய்கிறது.  இந்த சனிக்கதிர்கள் பூமியை வந்தடையும் போது எந்த தடையும் இல்லாமல் வந்தடையும் போதே கெடுதலை விளைவித்துவிடுகிறது.  சனிக்கதிர்கள் பூமியை வந்தடையும் போது, ராகு, கேது என்று சொல்லகூடிய நிழலுக்குள் புகுந்து நம்மை வந்தடையும் சூழ்னிலையும் வரும்.  இப்படி சனிக்கதிர்கள் நிழலுக்குள் புகுந்து வரும்போது, அவை சிதறலடைந்து, ஒழுங்கற்ற முறையில் நம்மை வந்தடையும் போது கெடுதல் இன்னும் அதிகரிக்கும்.  இந்த கெடுதல்கள் நிழல்களின் தன்மை, இயல்புக்கேற்றவாறு மாறுபடும்.  இந்த மாற்றங்களால் நமக்கு விளையும் தீமைகளே கிரகணதோஷம் எனப்படுகிறது.  சுக்கிரகதிர்களால் விளையவேண்டிய நன்மைகள் கூட இந்த நிழல்களுக்குள் புகுந்து வரும்போது, ஒழுங்கற்ற முறையில் சிதறடிக்கப்பட்டு, நம்மை வந்தடையும் போது அது கெடுதலை செய்து விடுகிறது.  இதே நிலையே மற்ற கிரகங்களுக்கு ஏற்படுகிறது.

கிரகங்களின் கதிர்கள், ராகு, கேதுக்குள் புகுந்து வர வேண்டுமானால், ராகு அல்லது கேது, அந்த கிரகங்களோடு ஜாதகத்தில் மிக நெருங்கி இருக்க வேண்டும்.  இதற்கு முன் சொல்லப்பட்ட பாகையையே அளவாக கொள்ளலாம்.  ராகு, கேதுக்களுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தாலும், பாகை அளவில் நெருங்கியிராமல், தொலைவாக விலகி இருந்தால், அந்த கிரகங்களின் கதிர்கள் ராகு, கேது எனப்படும் நிழலுக்குள் புகாமல் நம்மை நேரடியாக வந்தடைந்துவிடும்.  அப்போது கிரகணதோஷம் விளையாது.  சில ஜாதகங்களில் இந்த ராகு, கேதுவும், மற்ற கிரகங்களும் அடுத்தடுத்த ராசிகளில் இருக்கும்  ஆனால் பாகை அளவில் மிக நெருங்கியிருக்கும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில் கிரகணதோஷம் விளைந்துவிடும்.  இப்படி ராகு, கேதுக்கள் மற்ற கிரகங்களுடன் கொள்ளும் தொட்ர்பை துல்லியமாக ஆராய்ந்து பலன் சொன்னால் அது சரியாக இருக்கும் என்பது என் கருத்தும், என் குருனாதர் உபதேசமுமாகும்.  இதை விடுத்து ஒரே ராசியில் ராகு, கேதுவுடன் எந்த கிரகம் இருந்தாலும் அது கிரகணதோஷம் என்று முடிவுக்கு வருவது தவறாகிவிடலாம்.  ஜோதிடம் என்பது பழைமையான சாஸ்த்திரம் மட்டுமல்ல.  புதுமையான அறிவியலையும் தன்னகத்தே கொண்டது.  இதை உணர்ந்து, அதற்குரிய பலன் சொல்லும் ஜோதிடர்களே வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.  நன்றி.  வணக்கம்.    

கிரஹண தோஷம் பற்றிய பதிவு எண் 01.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.  : .....  கிரஹண தோஷம் பற்றிய பதிவு எண் 01.  : .......  பார்மபரிய முறை.  : .....  பொதுவாக நிழல்கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் அது கிரகண தோஷம் என்று சொல்லப்படுகிறது.  இதற்குரிய பலனாக, நிழல்கிரகத்துடன் எந்த கிரகம் இணைதிருக்கிறதோ, அதன் இயல்பான பலன் கெட்டுப்போகிறது என்றும் சொல்ல்ப்படுகிறது.  இன்னும் சொல்லப்போனால், கிரகண தோஷம் அடைந்த கிரகங்கள் எதுவுமே நற்பலன் தருவதில்லை, என்று சொல்லப்படுகிறது.   " எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ", என்பதற்கேற்ப மேற்கூறப்பட்டவைகளை பற்றி சற்று சிந்திப்போம்.  முதலில் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொண்டால், அவைகளுக்கு விடை தேடும்போது பல உண்மைகள் நமக்கு புரிய வரும்.

01.  நிழல்கிரகங்களுடன் ஒரே ராசியில் சூரியன் சந்திரன் இருந்தாலும், கிரகணம் ஆவதில்லை.  இப்படியிருந்தாலும் அதை தோஷம் என்று கொள்ளலாமா?  கிரகணம் இல்லாதபோது, சூரிய, சந்திரர்களின் ஒளி நமக்கு முழுமையாக கிடைக்கிறது.  அப்படியென்றால், இவ்விரு கிரகங்களின் முழ் சக்தியும் தடையின்றி முழுமையாக நமக்கு கிடைப்பதாகத்தானே பொருள்.  இது எவ்வாறு? தோஷமாகும்?

02.  ஒரு ராசியின் ஆரம்பத்தில் ஒரு கிரகமும், அந்த ராசியின் முடிவில் நிழல்கிரகமும் இருந்தால் இதை கிரகணதோஷம் என்று கொள்ளலாமா?  அப்படியென்றால், இவ்விருகிரகங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 22 பாகைகளாவது இடைவெளி இருக்கும்.  அடுத்தடுத்த ராசிகளில் இவ்விரு கிரகங்களும் இருந்து, பாகை அளவில் நெருங்கி இருந்தால், அதாவது குறைந்த பட்சம் 5 பாகை வரை நெருங்கியிருந்தாலும், அடுத்தடுத்து ராசிகளில் இருப்பதால் கிரகணதோஷம் விளையாதா?

03.  கிரகண தோஷம் அதிக பாதிப்பை தரும் என்றால், பழம்பெரும் ஜோதிட சாஸ்த்திரங்களின் மிக சிறந்த தொகுப்பாகிய " பிருஹத் ஜாதகம் ", கிரகண தோஷத்தையோ, அல்லது நிழல்கிரகங்களையோ பற்றி ஏன் எடுத்துக்கூறவில்லை?  இந்த சிந்தனைகளோடு கட்டுரையை தொடரலாம்.

சூரியன் இயற்கையில் தானாகவே ஒளிரக்கூடியது.   இந்த ஒளிக்கதிர்கள், சந்திரன் முதல் சனி வரையிலான எல்லா கிரகங்கள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது.  நமக்கு மிகவும் அருகாமையில் இருந்தபடி பிரதிபலிப்பது சந்திரன்.  வெகுதொலைவில் இருந்தபடி பிரதிபலிப்பது சனி.  இப்படி சூரிய ஒளி பிரதிபலிக்கப்படும் போது, அந்தந்த கிரகங்களின் இயல்பான தன்மைகள், ஒளீயாக பிரதிபலிக்கப்பட்டு, நம்மை வந்தடைகிறது.  பூமியும் சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது.  மற்ற கிரகங்களின் பிரதிபலிப்பை, நாம் பூமியிலிருந்து காண்பது போல், பூமியின் பிரதிபலிப்பை மற்ற கிரகங்களிலிருந்து காணமுடியும்.  ஒரு திடப்பொருள் மீது ஒளிக்கதிர் படுகிறது என்றால், அந்த திடப்பொருளின் மறுபுறம், அப்பொருளின் நிழல் இருக்கும்.  அது போல் சூரியனின் ஒளிக்கதிரை பெறுகிற எல்லாகிரகங்களுக்கும் நிழல்கள் உண்டு.  சந்திரனின் நிழலையும், பூமியின் நிழலையும் நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது.  உணரமுடிகிறது.   சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது விழுவது பூமியின் நிழல்.  சூரிய இக்ரகணத்தின் போது பூமியின் மீது விழுவது சந்திரனின் நிழல்.  இப்படிப்பட்ட நிழல்களால் பூமியில் இருக்கக்கூடிய ஜீவராசிகளுக்கு உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் உருவாகிறன.  இந்த மாற்றங்களால் தீமை விளைவதால், இதை தோஷம் என்று சொல்கிறோம்.  இது கிரகண நேரத்தில் விளைவதால் கிரகண தோஷம் என்று சொல்கிறோம்.   இப்படிப்பட்ட நேரத்தில் பிறந்த ஒருவரது ஜாதகத்தில், சூரியன், சந்திரன், நிழல்கிரகங்கள் ஆகியன மிக நெருக்கமான பாகையில் அமைம்திருக்கும்.  சந்திரகிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் நிழல் கிரகங்களுடன் இணைந்து சமசப்தமமாக இருக்கும்.  சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது இம்மூவரும் மிக நெருக்கமான பாகையில் இருப்பர்.  எழுதப்படும் மூல ஜாதகங்களில் இந்த கிரகண குறிப்பை அவசியம் எழுத வேண்டும்.  ஆனால் எழுதப்படுவதில்லை.  எனவே மேற்கண்ட கிரகண நிலைகளை வைத்து யூகித்தறிய வேண்டியிருக்கிறது.

இதில் சிக்கல் என்னவென்றால், மேற்கண்ட கிரகனிலைகள் இருந்தாலும், பல சமயங்களில் கிரகணம் விளையாமல் போகிறது.  இப்படி கிரகணம் விளையாத போது, சூரியனுடைய ஒளி வழக்கம்போல், நமக்கு முழுமையாகவே கிடைத்துக்கொண்டிருக்கும்.  அதுபோல் சந்திரனுடைய ஒளியும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.  இப்படி முழுமையாக ஒளி கிடைக்கும் போது அது எவ்வாறு கிரகணதோஷம் ஆகும்? என்ற ஒரு நியாயமான கேள்வி நம்முள் எழுகிறதல்லவா!   இன்னும் விரிவான சிந்தனைகளோடு அடுத்தபதிவில் சந்திப்போம்.  : ..........  தொடரும் ;: ..............