Friday 30 January 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்.....பகுதி....4



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்களை பற்றிய பதிவு இது.  பகுதி 4.  வர்ணங்கள் பிறப்பை ஒட்டி அமைவதில்லை.  தான் மேற்கொள்ளும் கர்மாவை பொறுத்தே அமைகிறது.  துரோணாச்சாரியார் பிறப்பாலும், மேற்கொண்ட கர்மாவாலும் பிராமனர்.  ஆனால் அவர் மகன் அஸ்வத்தாமன் பிறப்பால் பிராமணர் என்றாலும் மேற்கொண்ட கர்மாவால் க்ஷத்திரியரானார்.  விஸ்வாமித்திரர் பிறப்பால் க்ஷத்திரியர்.  மேற்கொண்ட கர்மாவால் பிராமணரானார். இவற்றை ஆமோதிப்பது போல் திருவள்ளுவரும் " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அதன் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான், " என்று குறள் எழுதியிருக்கிறார்.   இக்காலத்தில் இந்த வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கப்படவில்லை என்றாலும், ஜோதிடத்திற்காக ஜோதிடர்களாகிய நாம் அதை ஜாதகத்தை பொறுத்தவரை பின்பற்றியாக வேண்டும்.  அப்போதுதான் நவரத்தின கற்கள் சம்பந்தமான ஜோதிடகணிப்பு செய்ய முடிவதுடன், அவையும் பலிதமாகும்.  இனி வர்ணத்திற்கு தகுந்தவாறு வைரக்கற்கள் எவ்வாறு அமைகின்றன? என்று பார்க்கலாம். 

பிராமண வர்ணத்தார், ஒளி ஊடுருவும் தன்மையுடைய, வெண்மையான வைரத்தையும், க்ஷத்திரிய வர்ணத்தார், சிகப்பு, பிங்க் கலந்த செம்பு வண்ண வைரத்தையும், வைசிய வர்ணத்தார், லேசான மஞ்சள் கலந்த வைரத்தையும், சூத்திர வர்ணத்தார், கருப்பு மற்றும் கருமை படர்ந்த வைரத்தையும் அணிய வேண்டும்.  வைரத்துக்கும், செய்யும் தொழில் என்று சொல்லகூடிய கர்மாவுடன் தொடர்புடைய வர்ணத்துக்கும் தொடர்புடைய காரணத்தால், வர்ணம் மாற்றி வைரத்தை அணியும் போது செய்யும் தொழில், நடத்தை, செயல்பாடுகள் ஆகியவற்றில் பெரும் குழப்பம் விளைந்து விடும்..  வைரம் என்றாலே பளபளப்பாக கண்ணடி போல் இருக்க வேண்டும் என்றும், அதை அணிந்தால் பகட்டாகவும், கௌரவமாகவும் இருக்கும் என்றும் எண்ணும் எண்ணத்தை ஜாதகர்கள் கை விட்டு விட வேண்டும்.  அதுபோல் ஆண்குழந்தை பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பும் பெண்கள் கருவுறும் காலத்தில் வைரம் அணியக்கூடாது.  காரணம், சுக்கிரன் பெண்கிரகம்.  வைரமானது சுக்கிரனின் சக்தியை ஈர்த்து, பெருக்கி தருமாதலால், கருவில் இருக்கும் சிசுவுக்கு பெண் தன்மை அதிகரித்து விடும்.  ஆகவே வைரத்தை அணியுமாறு ஜாதகர்களுக்கு அறிவுறுத்துவதில் ஜோதிடர்களும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

 வைரம் முதன்முதலாக தோன்றியதற்கும், ஜோதிடத்தோடு தொடர்புடைய ஒரு ருசிகரமான புராண வரலாறு உள்ளது.  தேவலோகத்தை ஆள்பவன் இந்திரன்.  இந்திரன் என்பது தேவலோக ராஜபதவியின் பெயராகும்.  யார் வேண்டுமானாலும், தகுதி படைத்தவர்கள் இந்திரனாகலாம்.  ஒரு முறை இந்திர பதவியில் இருந்த யாரோ ஒரு இந்திரன், த்வஸ்தர் ஆதித்யா என்பவரின் மகனை கொன்றுவிட்டார்.  ஆகவே இந்திரனை பழிவாங்க அவர் விருத்திராசுரனை  உருவாக்கினார்.  இந்த விருத்திராசுரன் ராகுவின் சக்தியாக, கும்பராசியில் சதய நக்ஷத்திரத்தில் உருவானவன்.  காலபுருஷ தத்துவப்படி கும்பராசி, விருத்தியை தரும் லாபஸ்தானமாகும்.  எனவே அவனுக்கு விருத்திரன் என பெயர் வந்தது.  அந்த நேரத்தில் சூரியனுக்கு இந்திரபதவி கிடைத்து இந்திரனாக இருந்தார்.  எனவே சூரியனை எதிர்க்க, சூரியனை விட சக்தி வாய்ந்த ஜென்ம பகைவனான ராகுவின் சக்தியாக விருத்திராசுரனை த்வஸ்தர் ஆதித்யா உருவாக்கினார்.  இங்கே ராகு எனும் இருள் கும்பராசியில் உருவாக, சூரியன் எனும் ஒளியாகிய பகல் சிம்மராசியில் உருவாகும் என்பதை கவனிக்கவேண்டும்.  சூரியனுக்குரியது சிம்மராசி.  காலப்போக்கில் விருத்திராசுரன் எனும் ராகுவுக்கும், இந்திரன் எனும் சூரியனுக்கும் போர் மூண்டது.  இதில் விருத்திராசுரன் எனும் ராகுவின் பலம் ஓங்கியது.  ஜோதிட விதிப்படி ராகு எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசியின் எதிர்ராசி பலனை ஈர்த்துவிடுவார்.  ராகுவிடம் சூரியன் தோற்று கிரகணத்துக்கு உள்ளாவதும் இந்த தத்துவ அடிப்படையிலாகும்.   ஒரு போர் நடக்கும் போது அதற்கான வியூகம் வகுப்பது தனிக்கலையாகும்.  இந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நடந்த போரின் போர்க்கள வியூகத்தை திருமால் வகுத்தார்.  அது ஜாதககட்டம் போன்ற அமைப்பில் இருந்தது.  சூரியனாகிய இந்திரன் சிம்மராசி பகுதியிலிருந்து, தனக்கு நேர் எதிரிலிருந்த கும்பராசியின் பகுதியிருந்த விருத்திராசுரனாகிய ராகுவை எதிர்த்தார்.  விருத்திராசுரனாகிய ராகுவை வீழ்த்த சூரியனாகிய இந்திரன், ததீசிமகரிஷியின் முதுகெலும்பிலிருந்து உருவாகக்கூடிய வஜ்ராயுதத்தை பெறவேண்டும் என திருமால் உபதேசித்தார்.  வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருளாகும்.  அவ்வாறே சூரியனாகிய இந்திரன் வைர ஆயுதத்தை பெற்று ராகுவாகிய விருத்திராசுரனை வீழ்த்தியதாக புராணம் சொல்கிறது.  இவ்வாறாக முதன்முதலாக வைரம், ததீசிமகரிஷி முதுகெலும்பிலிருந்து தோன்றியதாகும்.  [ [ [ தொடரும் ] ] ].................



vv

Wednesday 28 January 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்.........பகுதி 3.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்களை பற்றிய பதிவு இது.  பகுதி 3.  நடிகர் திரு அமிதாப் ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது.  ஜாதகத்தில் சனிக்கு விரயாதிபதி, லக்னாதிபதி என்ற இரு பதவிகள் ஏற்படுகின்றன.  இதில் சனி லக்னாதிபதியாக செயல்படுவதில் முக்கியத்துவம் ஏற்படுகிறது.  மகரமும், கும்பமும் ஆட்சி வீடு என்றாலும், கும்பம் சனிக்கு மூலத்திரிகோணம் என்ற சிறப்பை பெற்று மகரத்தை விட அதிக பலம் பெறுகிறது.  லக்னாதிபதி கேந்திரத்தில் நட்பாக இருப்பது சிறப்பு.  இதுவே சனி கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் சசயோகத்தால் பெரும் யோகம் தந்திருப்பார்.  எனவே சனி ஜாதகத்தில் நட்பாக இருந்தாலும், வேறுவகையில், சூட்சுமமாக வலு ஏற்றி, உச்ச பலத்திற்கு கொண்டுவர வேண்டும்.  சனியின் பார்வை லக்னம், களத்திரம், தொழில் ஆகிய நல்ல ஸ்தானங்களில் பதிகிறது.  சனிக்கு வேறு பாப கிரக தொடர்பு இல்லை.  எனவே திரு அமிதாப்பின் ஜோதிடர், அவரை நீலக்கல் அணியசெய்து, சனிக்கு மறைமுகமாக பலம் சேர்த்துவிட்டார்.  ஆகையால் சனி நல்ல யோகம் தந்து, ஜாதகரை வாழ்க்கையில் உயர்த்தியிருக்கிறது.  இப்படி கணித்து, ஜாதகருக்கு நல்ல யோகம் பெறசெய்வதே, அனுகூலசக்தி முறையாகும்.  அதாவது, ஒரு ஜாதகத்தில் நல்ல யோகம் தரக்கூடிய கிரகத்தின் பலத்தை ரத்தினக்கல்லால் பெருகசெய்து, ஜாதரின் வாழ்க்கையை வளப்படுத்தலாம்.

ஒரு ஜாதகத்தில் ராசியை வைத்து, அதற்குரிய ரத்தினத்தை அணிய வேண்டும் என்று பல ஜோதிடர்கள் மேலோட்டமாக சொல்லிவிடுகிறனர்.  அது கருத்து புழக்கத்துக்கு வந்து, பல ஜாதகர்கள் தாமாகவே ராசிக்கல்லை தேற்வு செய்துகொண்டு, அணிந்து அவதிக்குள்ளாகிறனர்.  திரு. அமிதாப்பின் ராசி துலாம்.  ராசிக்கல் என்ற வகையில் இவர் வைரத்தை அணிந்தார் என்று வைத்துகொள்வோம்.  அவரது வாழ்க்கை அதலபாதாளத்திற்கே சென்றிருக்கும்.  சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரன், அஷ்டமத்தில் நீசபங்கம்.  வைரத்தை அணிவதன் மூலம், சுக்கிரனின் வலுவை கூட்ட முடியும். சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரன் சூட்சுமமாக உச்ச பலம் பெறுவார். ஆனால் சுக்கிரனின் இருப்பிடமான அஷ்டமத்தை  மாற்றிவிடமுடியாது.  ஆகவே சுக்கிரன் தீய பலனை வைரத்தின் மூலம் அதிகரித்துவிடுவார்.  எனவே கண்மூடித்தனமாக ராசிக்கல் அணிவது பெரும் தவறாகும். இனி பிரதிகூல சக்திமுறையை பார்ப்பதற்கு முன் வைரக்கற்களை பற்றி ஒரு சில முக்கியமான செய்திகளை பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. 

ஜாதகர் அணீய வேண்டிய வைரத்தை தேர்வு செய்தபின், அவர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர் என்று தீர்மானிக்க வேண்டும்.  வர்ணத்தை பொறுத்து வைரக்கற்கள் வித்தியாசப்படுகின்றன.  ஆகவே வர்ணத்துக்குரிய வைரத்தை தேர்வு செய்தல் வேண்டும்.  வர்ணங்கள் நான்கு வகை.  ஜாதகரின் வர்ணம், ஜாதகப்படி அவர் மேற்கொள்ளும் கர்மாவை [ தொழில், நடத்தை, செயல் ] பொறுத்து அமைகிறது.  எனவே  வர்ணத்தை தசமஸ்தானமாகிய, கர்மஸ்தானத்தை வைத்து தீர்மானிக்க வேண்டும்.  நான்கு வகை வர்ணங்களும், அவைகளுக்குரிய கர்மாக்களும் பின்வருவன.........................

1.  பிராமணர்................வேதம் ஓதுதல், ஓதுவித்தல்,  அதாவது வேதம் தொடர்பான கர்மாக்களை மேற்கொள்ளுதல்.  2.  க்ஷத்திரியர்.  வீரத்தை அடிப்படையாக கொண்டு தேசபரிபாலனம் செய்தல்.  அதாவது நாட்டை ஆண்டு, நிர்வாகம் செய்தல்.  3.  வைசியர்.  வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடுதல்.  அதாவது, அனைத்து வர்ணத்தாருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை வாணிகத்தின் மூலம் நிறைவேற்றித்தருதல்.  4.  சூத்திரர்.  மேற்கண்ட மூவர்ணத்தாரும், தங்கள் உரிமை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உறுதுணையாக இருத்தல்.  ஒவ்வொருவருக்கும் தான் பிறக்கும் குலத்தை ஒட்ட்டித்தானே வர்ணம் அமையும்! என்ற சந்தேகம் இப்போது எழலாம்.  இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

Sunday 25 January 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்....பகுதி 2.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்களை பற்றிய பதிவு இது.  பகுதி 2..  முதன் முதலாக ரத்தினங்கள் தோன்றியதை பற்றி புராணங்கள் எடுத்து சொல்கின்றன.  இந்த புராணத்தகவல்கள் ஜோதிடத்திற்கு தேவைப்படுவனவாகும். 

வைரத்தை தவிர மற்ற எட்டு வகை ரத்தினங்கள் பலாசுரன் எனும் அரக்கனின் எலும்பிலிருந்து முதன்முதலாக வெளிப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.  பலம் என்றால் சக்தி என்று பொருள்.  பலாசுரனின் பெயருக்கேற்றவாறு அவன் எலும்பிலிருந்து தோன்றிய ரத்தினங்களும் அதிக சக்தி படைத்தனவாக இருந்தன.  இந்த சக்தி கிரகங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கு மேலும் சக்தியேற்றுவதாக அமைந்திருந்தது.  இந்த புராண செய்தியில் ஒரு உட்பொருள் மறைந்துள்ளது.  அதாவது...................சூரியனின் காரகத்துவம் [ தாது ] எலும்பு.  எலும்புகள் நல்ல முறையில் வலுவுடன் அமையவேண்டுமானால் சூரியன் அருள் வேண்டும்.  பலாசுரனுக்கு அது கிடைத்திருந்தது.  பலாசுரனின் எலும்புகள் சூரியன் அருளால் அதிக சக்தி படைத்தனவாக இருந்தன.  அதனால் அதிலிருந்து தோன்றிய ரத்தினங்களும் அதிக சக்தி படைத்தனவாக இருந்தன.  இதிலிருந்து சூரியனுக்கும் ரத்தினங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த புராண வாயிலாக அறிய முடிகிறது.  எனவே ரத்தினங்கள் சக்தி பெற சூரியகதிர்கள், அதன் மேல் விழுமாறு ஒரு முஹூர்த்த நேரமாவது தினசரி வைக்க வேண்டும் என மெய்ஞானமும், விஞ்ஞானமும் சொல்கிறது.  இப்படி சக்தி பெறும் ரத்தினங்கள் நமக்கு யோகங்களை அள்ளி வழங்குகின்றன.  இதை அனுகூல சக்தி முறை என ஜோதிட சாஸ்த்திரம் சொல்கிறது.  இந்த அனுகூல சக்தி முறை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.....................

நமது ஜாதகத்தில் நல்ல யோகம் தரக்கூடிய கிரகம் அமைந்திருக்கும்.  இந்த கிரகம், தன் தசைக்காலத்தில் நல்ல யோகம் தரும்.  ஆனால், ஜாதக அமைப்பில் நல்ல யோகம் தரக்கூடிய அந்த கிரகம், சக்தி குன்றியிருந்தால். நல்ல யோகம் தர இயலாமல் தடுமாறும்.  இத்தகைய சூழலில், அந்த கிரகத்திற்கு சக்தியேற்ற, அந்த கிரகத்துக்குரிய ரத்தினக்கல்லை அணிந்தால், கிரகத்தின் சக்தியை, ரத்தினக்கல் ஈர்த்து, பெருக்கி நமக்கு தந்துவிடும்.  நாம் முன்பு பார்த்த புராண தத்துவப்படி, சூரியன் அருள் பலாசுர எலும்பான ரத்தினத்திற்கு கிடைக்க வேண்டும்.  அப்படி கிடைத்தால் ரத்தினத்தின் சக்தி மென்மேலும் பெருகும்.  எனவே, ரத்தினக்கலுக்குரிய, யோக கிரகத்திற்கு, ஜாதகத்தில் சூரியன் நல்ல ஸ்தானாதிபதி என்ற முறையிலோ, அல்லது யோக கிரகத்திற்கு நட்பு என்ற முறையிலோ, சூரிய இணைவு இருத்தல் மிக விசேஷமானது.  இத்தகைய அமைப்பு மட்டும் இருந்துவிட்டால், அணியும் ரத்தினக்கல் மூலம், ஜாதகர் வாழ்க்கையின் சிகரத்திற்கே சென்று விடுவார் என்பதில் ஐயமில்லை.  சூரியனுடைய பரிபூரண அருள் யோக கிரகத்தை அடைந்து, அதன் மூலம் ரத்தினக்கல்லை அடைகிறது என்பது இதன் அடிப்படை தத்துவம்.  ரத்தினக்கல் அணிவதில் நிறைய ஆன்மிக கட்டுப்பாடுகள் உள்ளன.  அதுபோல், தரம், அளவு, உட்பிரிவு ஆகியனவற்றையும் கவனிக்க வேண்டும்.  அவற்றை இனி வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.  இனி அனுகூல சக்தி முறை மூலம் ரத்தினக்கல் அணிந்து, உலகில் புகழேணியின் உச்சிக்கு சென்று சாதனை படைத்து பெரும் கோடீஸ்வரராக திகழ்ந்த நடிகர். திரு அமிதாப்பச்சன் அவர்களின் ஜாதகத்தை பார்ப்போம்.  ஜாதகம் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இவருக்கு சனிதிசை 1971, ஜனவரியில் தொடங்கியது.  சனிதிசைக்காக, சனியின் ரத்தினக்கல்லான நீலத்தை இவர் அணிந்தார் என இவரை பற்றிய வலைதள குறிப்புகள் சொல்கிறன.  1974, ஜனவரியில் புதன் புக்தி தொடங்கியது.  அப்போது திரைப்படத்துறையில் நுழைந்து அறிமுகமான முதல் இந்திப்படமான ' ஜஞ்ஜீர் ' வருடக்கணக்கில் ஓடி பெரும் புகழை தந்தது.  தொடர்ந்து வெற்றி படங்கள் வெளியாயின.  தொலைகாட்சியில், ' கோன் பனேகா க்ரோர்பதி ", என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும்பணமும், புகழும் ஈட்டினார்.  இதற்கெலாம் காரணமாக சனியின் நீலக்கல் அமைந்திருந்து.  இதை இவரது ஜோதிடர் அனுகூலசக்திமுறைபடி அணியசெய்திருக்க வேண்டும்.  அந்த கணிப்பு எவ்வாறு அமைந்து வெற்றி பெற்றது? என்று ஆராய்வோம்.  இந்த ஆராய்ச்சி என்னுடைய கணிப்பின்படி எவ்வாறு? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.  [ [ [ தொடரும் ] ] ]



Saturday 24 January 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்.............பகுதி..1.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்களை பற்றிய பதிவு இது. பகுதி. 1. இந்த பதிவின் நோக்கம் ரத்தினங்களுக்கும் ஜோதிடத்திற்கும் இடையே உள்ள தொடர்பு மட்டுமே விவரிக்கப்பதாகும்..  எனவே வணிகம் சம்பந்தமான விபரங்கள் இதில் இடம் பெறவில்லை.

மனிதனுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  மனித உடல் இந்த பிரபஞ்சத்திலுள்ள  நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு எனும் ஐம்பூதங்களால் ஆனது.  நம் உடலில் நீர் உள்ளது, நிலத்திலுள்ள தாதுப்பொருட்கள் நம் உடலில் உள்ளன.  மூச்சுக்காற்றாக காற்று இருக்கிறது.  உடல் எனும் கூட்டில் உள்ள இடைவெளியானது ஆகாயம்.  இந்த ஆகாயம் எனும்  வெட்டவெளி இல்லையேல் உடலுக்கு உருவம் இருக்காது.  உடலில் நிலவும் வெப்பமே நெருப்பின் அம்சமாகும்.  இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் மனிதன் பிணம்.  ஐம்பூதங்களாலான இந்த உடல் இயங்குவதற்கு உயிர் எனும் சக்தியை இறைவன் தந்திருக்கிறான்.  இந்த இயக்கத்தை கட்டுப்படுத்துவது, இந்த பிரபஞ்சத்திலுள்ள நவக்கிரங்களின் சக்தி எனப்படும் கிரககதிர்வீச்சு அலைகளாகும்.

  இந்த ஐம்பூதங்கள், மற்றும் நவக்கிரகங்களின் கதிர் வீச்சுகளில் ஏற்படும்  ஏற்றத்தாழ்வுகளால் நமக்கு வாழ்க்கையில் உடலுக்கும், உள்ளத்துக்கும்  இன்பதுன்பங்கள் விளைகின்றன.  இந்த ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து, அவற்றை சீர்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை விவரிப்பதே ஜோதிடம் எனும் மாபெரும் ஞானக்கலையாகும்.  சீர்படுத்தும் வழிமுறைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று நவரத்தினங்களை பயன்படுத்துதலாகும்.  இந்த நவரத்தினங்கள், மனித உடலைப்போல் ஐம்பூதங்களால் ஆனவை..  நவக்கிரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சுகளை ஈர்த்து பெருக்கித்தரும் சக்தி படைத்தவை.  எனவே நம் ஞானிகள் இவற்றை பற்றிய விபரங்களை நமக்கு அறிவுருத்தியிருக்கிறார்கள்..  அவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலம் நாம் பலவகைகளில் நலமும், நன்மையும் பெற முடிகிறது.  இவை மெய்ஞான விஷயம் மட்டுமல்ல..  இந்த விஷயங்களை விஞ்ஞானமும் ஒப்புகொண்டுள்ளது.  இனி மனிதஉடல், வாழ்க்கை, ஜோதிடம், நவரத்தினங்கள் ஆகியவற்றின் இடையே ஒன்றுகொன்று கொண்டுள்ள தொடர்புகள் பற்றி பார்ப்போம்.

ஐம்பூதங்களுக்குரிய ரத்தினங்களாவன:...............1.  நீருக்குரியது வைரம்.  2.  நிலத்துக்குரியது..........மரகதம்.  3.  காற்றுக்குரியது..................இந்திரனீலம்.  [ நீலம் என்ற ரத்தின வகைகளில் ஒன்று.., இந்திரனீலம்.  4.  ஆகாயத்துக்குரியது......................ஐவரிமுத்து.  ஐவரி என்பது முத்தின் நிறத்தை குறிக்கும்..  5.  நெருப்புக்குரியது...................பத்மராகம் எனப்படும் மாணிக்கம். 

முக்கியகுறிப்பு:.............முதன்மையான ரத்தினவகைகள் ஒன்பது.  இவை நவக்கிரகங்களுக்குரியவை.  இந்த ஒன்பது ரத்தினங்களை சேர்ந்த மற்ற வகைகள் 13.  மொத்தம் 22.  இந்த 22 வகை ரத்தினங்களையும் ஸ்ரீவராகிமிகிரர் தன்னுடைய பிருகத் சம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளார்..  நவக்கிரகங்களுக்குரிய முதன்மையான ஒன்பது வகை ரத்தினங்களாவன.......................1.  சூரியனுக்குரிய மாணிக்கம்.  2.  சந்திரனுக்குரிய முத்து.  3.  செவ்வாய்க்குரிய பவளம்.  4.  புதனுக்குரிய மரகதம்..  5.  குருவுக்குரிய புஷ்பராகம்.  6.  சுக்கிரனுக்குரிய வைரம்.  7.  சனிக்குரிய நீலம்.  8.  ராகுவுக்குரிய கோமேதகம்,  9.  கேதுவுக்குரிய வைடூரியம் ஆகியவை.  இனி இந்த நவரத்தினங்களுக்குரிய பிரிவுகளை பார்க்கலாம்.

மாணிக்கம் என்பது பத்மராகம், ருதிரம் என்று 2 வகையாக உள்ளது.  மரகதத்தில் கற்கேதாரம் என்று இன்னொரு வகை உள்ளது.  புஷ்பராகம் மேலும் பிரம்மமணி, ஜோதிரசம், சாஸ்யகம் என்ற மூன்று வகையுடன் சேர்ந்து நான்காக உள்ளது.  நீலத்தில் இந்திரனீலம் என்றொரு வகை உண்டு.  கோமேதகத்தில் சங்கம் என்று ஒரு வகை உண்டு.  வைடூரியத்தில், ராஜமணி, ஸ்படிகம், விமலகம், புலகம் சசிகாந்தம், சௌகந்திகம் என்று மேலும் ஆறு வகைகள் உள்ளன.  இவைகளோடு, முத்து, பவளம், வைரம் ஆகியன சேர்த்து மொத்தம் இருபத்திரண்டு வகைகளாகும்.  இவையனைத்தும் ஜோதிட சாஸ்த்திரத்தோடு தொடர்புடையவை என ஸ்ரீவராகிமிகிரர் கூறுகிறார்..  [ [ [ தொடரும்....................  ] ] ]