Sunday 23 October 2016

" சுகஸ்தானமும், நோய்களும் ",



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  " சுகஸ்தானமும், நோய்களும் ",  : ..........  பாரம்பரிய முறையிலான பதிவு.  ஜாதக கட்டத்திலுள்ள 4 ஆம் ஸ்தானத்தை சுகஸ்தானம் என்கிறோம்.  இந்த ஸ்தானம் கெட்டால் சுகக்கேடு விளையும் என்பது எல்லோர் கொள்கை.  சுகம் கெட்டால் என்னாகும்?  நோய் வரும்.  எனவே சுகஸ்தானம் கெடுவது நோய்க்கான அறிகுறி என்பது பலர் முடிவாக இருக்கிறது.  மேலோட்டமாக பார்த்தால் இதுவே உண்மை எனவும் நமக்கு தோன்றுகிறது.  சுகஸ்தானம் கெட்டு, அதன் மூலம் நோய்கள் வரும் என்றால், நம் ஜோதிட ஞானிகள், 6, 8 என்ற இரு ஸ்தானங்களை பற்றி விரிவாக சொல்லியிருக்க மாட்டார்கள்.  அதற்கு அவசியமென்ன?  6. 8 என்ற ஸ்தானங்களோடு தொடர்புடைய கிரகங்களின் காரகத்துவங்களை கொண்டு நோய்கள் இன்னதென்று விதி வகுத்தவர்கள், 4 ஆம் ஸ்தானத்திற்கு அவ்வாறு ஒரு விதி முறையை வகுக்காதது ஏன்? என்றெல்லாம், சிந்திக்கும் போது,  சுகம், சுகக்கேடு மற்றும் நோய்கள் என்ற இவ்விரு சொற்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் வகையில், ஏதோ ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது.  அதனால், 4 மற்றும் 6. 8 ஆகிய ஸ்தானங்களுக்கிடையேயும் ஏதோ ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது என்ற உணர்வு நமக்கு நிச்சயமாக வரும்.

நல்லதோ, கெட்டதோ, தன்னுடைய மனம் எதை விரும்புகிறதோ? அதை தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதும், அதனால் மனமகிழ்ச்சி அடைவதும் அனுபவிப்பவரை பொறுத்தவரை அது சுகம் ஆகும்.  இதில் நல்ல சுகம், கெட்ட சுகம் என்று இருவகை உண்டு.  சுபஸ்தானாதிபதிகள், சுகஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல சுகம் கிடைக்கும்.  அதனால் அவர் மனமகிழ்ச்சி அடைகிறார்.  சுபஸ்தானாதிபதி, பகை, நீசம் அடைந்தால் அதில் தடை ஏற்படுகிறது.  உதாரணத்திற்கு, 2 ஆம் அதிபதி சுகஸ்தானத்தில் இருந்தால், ஜாதகர் தான் விரும்பும் உணவுகளையெல்லாம், உண்டு மனமகிழ்ச்சி அடைவார்.  2 ஆம் அதிபதி சனியானால், ஜாதகர் எண்ணெயில் பொரித்த சுவையான அசைவ உணவுகளை உண்டு மகிழ்வார்.  அதில் ஒரு சுகம்.  இத்தகைய உணவுகளால் ஜீரண மண்டல உறுப்புகளில் நோய் வந்து அவதிப்படுபவர்களும் உண்டு.  அதுபோல் எவ்வித இடையூறுமின்றி இறக்கும் வரை நன்றாக வாழ்ந்தவர்களும் உண்டு.  சனியின் சாரனாதன் குருவாகி, அவர் அஷ்டமத்தில் இருந்தால், நிச்சயம் ஜீரண மண்டல உறுப்[புகளில் நோய் வரும்.  கொழுப்பு அதிகமாகி ரத்த அழுத்தமும் வரும்.  இதுவே சாரனாதனாகிய குரு லாபத்தில் இருந்தால், வாழ்னாள் முழுதும் மேற்கண்ட உணவை உண்டு மகிழ்வதில் மன்னனாக இருப்பார்.    அடிக்கடி மது அருந்தும் ஒருவர், நீண்ட காலம் நல்ல முறையில் வாழ்வதும், எப்போதாவது அருந்துபவர், வயிற்று புற்றால் அவதிப்பட்டு அகால மரணம் அடைவதும், மேற்கண்ட ஸ்தானங்களின் செயல்பாடுகளே.  எனவே சுகஸ்தானம் அடையாளம் காட்டுவது ஜாதகர் அடையும் மனச்சுகம்.  6. 8 ஆகிய ஸ்தானங்கள் அடையாளம் காட்டுவது ஜாதகர் அடையும் உடற்சுகம்.  அதாவது நோய்கள்.  புகையிலை மெல்லுவது, மூக்குப்பொடியை பயன்படுத்துவது ஆகியன ஒருவருக்கு மனசுகத்தை தரலாம்.  அதுவும் அது கெட்டசுகமாகும்.  இதன் விளைவாக சம்பந்தப்பட்ட நோயை தருவதும் தராததும் 6. 8 என்ற ஸ்தானங்களின் அமைப்பு.  இதைபற்றி ஒரு சில கிரக அமைப்புகளோடு சற்று விரிவாக பார்ப்போம்.  : ...............

மீனலக்னம்.  விரயாதிபதி சனி 4 ஆமிடம் குரு சாரம்.  குரு அஷ்டமம்.  சுயசாரம்.  இந்த அமைப்பு உடைய ஜாதகர் தாங்கொணாத அளவுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்.  எவ்வாறு?  விரிவாக பார்ப்போம்.  விரயாதிபதி சனி 4 ல்.  விரயம் அசுபஸ்தானம் என்பதால் ஜாதகர் அடைவது கெட்ட சுகம்.  அத்துடன் விரயம் செலவையும் குறிக்கும்.  சனியின் காரகத்துவம் இறைச்சி.  குருவின் காரகத்துவம் கொழுப்பு.  அஷ்டம காரகத்துவம் நோய்.  அஷ்டமத்தில் குரு இருந்தால் ஆயுள் குறைவு.  ...................  இவைகளையெல்லாம் ஒன்றிணைத்தால்..........................  ஜாதகர் அசைவ விரும்பி.  இதற்காகசெலவுகள் செய்ய தயங்கமாட்டார்.  சனியின் இருப்பிடம் நட்பு.  எனவே மிகவும் விரும்பி, அளவுக்கதிகமாகவே இறைச்சி வகையறாக்களை உண்ணுவார்.  இது ஜாதகருக்கு சுவைசுகம்.  ஆனால் சாஸ்த்திரப்படி கெட்டசுகம்.  இந்த கெட்ட சுகத்தை அனுபவிப்பதால், கொழுப்பு அதிகமாகி, அதுவே உயர் ரத்த அழுத்தமாகி, ஆயுளை குறைத்து அகால மரணத்தை தந்துவிடும்..  இந்த கிரக நிலையை நாம் வேறுவகையிலும் அணுகலாம்.  ;;;;;;;;;;;;;;;;;;;  லக்னாதிபதி குரு அஷ்டமத்தில் சுயசாரம்.  லக்னாதிபதி அஷ்டமத்தில் பகையானதால் ஆயுள் குறைவு.  மேலும் அஷ்டமத்தில் குரு இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படும்.  அதாவது ஜீரணமண்டல கோளாறுகள், மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிப்புகள் வரும்.  இதே கிரக அமைப்புகளோடு, இந்த சுகஸ்தானத்தை வேறு வகையில் அணுகி பார்க்கலாம். : ......................  லாபம் எனக்கூடிய சுபஸ்தானாதிபதி சனி, சுகம் எனக்கூடிய சுபஸ்த்தானத்தில் இருப்பதால், ஜாதகர அனுபவிக்கும் சுகம் நல்ல சுகமாக இருக்கும்.  அதாவது நல்ல வருமானம் தரும் தொழிலில் கடுமையாக உழைத்து, தேவையான தூக்கத்தை நிம்மதியாக பெறுவார்.  இது நல்ல சுகம்.  சாராதிபன் அஷ்டமத்தில் இருப்பதால், வருமானத்தையும் மீறிய நிதிப்பற்றாக்குறையால் கடன் இருந்துகொண்டே இருக்கும்.  இதை இன்னொரு வகையிலும் அணுகலாம்.  லக்னாதிபதி குரு அஷ்டமத்தில் பகை என்பதால் வாழ்னாள் முழுதும் நிதிப்பற்றாக்குறையால் கடன் இருக்கும்.  இதே குரு தொழில் ஸ்தானத்துக்கும் அதிபதியாகி, அஷ்டமத்தில் இருப்பதால், தொழிலுக்காக ஜாதகர் கடன் வாங்கியே தீர வேண்டும் என்ற நிலையை காட்டுகிறது.

சுகத்தில் நல்ல சுகம், கெட்டசுகம் இருப்பதுபோல் நோயில் நல்ல நோய், கெட்ட நோய் என்று கிடையாது.  நோய் என்றாலே கெடுதல் தான்.  இதிலிருந்து, சுகஸ்தானத்திற்கும் நோய்களை குறிக்கும் ஸ்தானங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ளலாம்.  இப்படி நாம் ஆராயும் எண்ணத்தோடு ஸ்தானங்களை பற்றி சிந்திக்கும்போது, அதனுள் ஒளிந்திருக்கும் வேறுபாடுகளையும் சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடியும்.  ஆனால் இந்த ஆய்வுகள் எல்லாம் ஜோதிட விதிமுறையோடு ஒத்துப்போகவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடோடு ஆராயவேண்டும். அதற்குரிய நல்ல ஞானத்தை குருவருளும், இறையருளும் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்வோமாக.  நன்றி.  வணக்கம்.     

" குழந்தை ஜாதகமும் பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை. ............ 01



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம்.  " குழந்தை ஜாதகமும் பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை.  ஜோதிடர்களுக்கான பதிவு.  பாரம்பரிய முறை.  : .........  குழந்தையின் ஜாதகம் 12 வயது வரை செயல்படாது.  இது பொது மக்களிடையே நம் ஜோதிடர்களில் சிலர் பரப்பி விட்டிருக்கும் செய்தி.  முதல் 4 வருஷங்கள் தாயின் ஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  அடுத்த 4 வருஷங்கள் தந்தையின் ஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  இதற்கடுத்த 4 வருஷம் தன் சுயஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  இது ஜோதிடர்களில் சிலர் சாஸ்த்திர விதியென கூறுகிறார்கள்.  ஆனால் இந்த ஜோதிட விதிக்கு ஜோதிடர்களிடையே பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதே உண்மை.  நமக்கு ஜோதிடம் சொல்லித்தரும் முன்னணி சாஸ்த்திரனூல்களில் இந்த ஜோதிட விதிகள் இல்லை.  எனவே இந்த விதிகளுக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது.  மேலும் 12 வயதுவரை குழந்தை ஜாதகம் செயல்படாது என்று சொல்லிவிட்டு, 8 ஆவது வயது முதல் 12 ஆவது வயது வரை சுய ஜாதகம் செயல்படும் என்றும் சொல்கிறார்கள்.  இந்த முரண்பாடு ஏன்?  இப்படிப்பட்ட முரண்பாடுகளால் மனதில் பல கேள்விகள் முளைக்கிறன.

முதலில் தாய் ஜாதகம், பின் தந்தை ஜாதகம், பின் சுயஜாதகம் செல்லுபடியாகும் என்றால் 12 வயதுக்கு பின்பு யாருடைய ஜாதகம் செல்லுபடியாகும்?  8 வயதுக்கு மேல் சுயஜாதகம் செல்லுபடியாகும் என்றால், நேரடியாக, 8 வயதுவரை குழந்தையின் ஜாதகம் செயல்படாது என்று சொல்லியிருக்கலாமே!  ஏன் அவ்வாறு சொல்லவில்லை?  : ................  தாய்க்கோ அல்லது தந்தைக்கோ ஜாதகம் இல்லையென்றால், யாருடைய ஜாதகம் வைத்து குழந்தைக்கு பலன் அறிவது?  குழந்தை பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டால், முதல் 4 வருஷங்களுக்கு குழந்தைக்கு எந்த ஜாதகம் வைத்து பலன் பார்ப்பது?  குழந்தையின் ஜெனன ஜாதகம் வைத்து, தாய், தந்தை, தாய்மாமன், உடன்பிறந்தார், சித்தப்பா, சின்னமா, அத்தை ஆகியோரைபற்றி அறியலாம் என்ற வகையில் ஜோதிட விதிகள் இருக்கிறதே.  இவற்றை பயன்படுத்துவதா? அல்லது வேண்டாமா?  இவைகளில் ஏதாவது நுட்பமான ஜோதிட சூட்சுமம் ஒளிந்திருக்கிறதா?  ஒரு தந்தைக்கு இரு குழந்தைகள் இருந்து, அவைகளுக்கு முறையே 5. 7 வயது என்றால், தந்தையின் ஜாதக கர்மவினை எந்த குழந்தையை பாதிக்கும்?  இரட்டை குழந்தைகள் பிறந்து வாழும் போது, இரு வேறு அனுபவங்களை பெறுகிறன என்பது உண்மையானால், மேற்கண்ட விதி எந்த அளவுக்கு சாத்தியம்?  பெற்றோரின் கர்மவினைகளை 8 வயதுவரை குழந்தை அனுபவிக்கும் என்றால், பெற்றோர்கள், அவரவர்கள் ஜாதக கர்மவினைப்படி,  துன்பம், துயரம் ஆகியவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்போதோ அல்லது வேற்றிடத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலோ, அந்த குழந்தைகள் நலமுடன் மகிழ்ச்சியாக இருப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.  இதன் பொருளென்ன?  இனி ஜோதிட சாஸ்த்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ள ஒரு சில ஜோதிடவிதிகளை சிந்தித்தோமானால், மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஜோதிட சாஸ்த்திர நூல்களிலேயே மிகமிக எளிதானதும், ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு முதல் புத்தகமாகவும் விளங்கும் " குடும்ப ஜோதிடம் ", என்னும் நூல் பாலாரிஷ்ட விதிகளை தொகுத்து தருகிறது.  குழந்தைபருவத்தில் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் என்பதே பாலாரிஷ்டத்தின் தமிழாக்கம் ஆகும்.  இன்னூலில் உள்ள விதிகளில் ஒன்று : .................  லக்னத்திலிருந்து 4 குடையவன் 8 ல் இருந்தால், அவமானமுள்ள தாய், அல்லது ஜாதகனுக்கு தாயினால் அவமானம் ஏற்படும்.  : ...............  இதன் விளக்கமாவது.  ..........  4 ஆமிடத்தின் காரகத்துவம் தாய்.  8 ஆமிடத்தின் காரகத்துவம் அவமானம்.  ஜாதகம் குழந்தையினுடையது என்பதால், குழந்தையின் தாய், குழந்தைக்கு அவமானத்தை தேடித்தருவாள்.  இது பொதுவான பலன்.  எத்தகைய அவமானம் என்றறிய சாரம், மற்றும் 8 க்குடையவன் இருக்குமிடம் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.  தாய் அவமானமுடையவளாக இருப்பாளா? என்று அறிய, குழந்தையின் ஜாதகத்தில் " பாவத்பாவ " முறைப்படி பலன் விளைகிறதா? என்று பார்க்க வேண்டும்.  அதற்கு தாய்காரகன் யார்? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.  குழந்தை பகலில் பிறந்திருந்தால் சுக்கிரனும், இரவில் பிறந்திருந்தால் சந்திரனும் தாய்க்காரகர்களாவர்.  மேலே சொல்லப்பட்ட விதி சுருக்கமானது என்பதாலும், ஜோதிடம் பயில்பவர்களுக்கானது என்பதாலும், நாம் எதிர்பார்க்கும் நுட்பங்கள் அதில் கொடுக்கப்படவில்லை.  மேற்கண்ட விதியின் மூலம், தாய், குழந்தை இருவரின் நிலை என்னவென்று அறிய குழந்தை ஜாதகமும் வேண்டும் என்று புரிந்துகொள்ளலாம்.

அதே நேரம் தொழில்முறை ஜோதிடர்கள், இந்த விதியையும் பலனையும் இதோடு நிறுத்திக்கொள்வதில்லை.  தாயின் ஜாதகத்தையும் கவனிப்பர்.  தாயின் ஜாதகத்தில் லக்னாதிபதி அஷ்டமத்தில் இருந்தால் தாய்க்கு அவமானம் நேரும்.  எனவே தாய் அவமானமுள்ளவளாகிறாள்.  அத்துடன் தாய் ஜாதகப்படி புத்திர காரகன் குரு.  எனவே குரு இருக்குமிடத்தை லக்னமாக கொண்டு, குழந்தைக்கு தாயால் அவமானம் நேருமா என்றும் பார்க்க வேண்டும்,  இப்படி இருவழிகளிலும் உறுதியாகும் போது, நாம் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வர முடிகிறது.  அதற்கு குழந்தையின் ஜனன ஜாதகமும் அவசிய தேவையாகிறது என்பதையும் உணரமுடிகிறது.  ................  நாம் கலந்துரையாடல் இன்னும் இருக்கிறது.  அடுத்த பதிவில் தொடர்வோம்.  .................         

" குழந்தை பிறப்பும், பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை.



ம் படைவீட்டம்மா துணை.  பெற்றோர்களுக்கு வணக்கம்.  " குழந்தை பிறப்பும், பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை.  பாரம்பரிய முறை பதிவு.  பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கிறது என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்.  அந்த குழந்தை பிறந்த பின் பெற்றோஎதிர்ர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருப்பார்கள்.  சொத்து வாங்கியிருக்கலாம்.  திடீர் பணவரவு ஏற்பட்டிருக்கலாம்.  பிரிந்த உறவுகள் சேர்ந்திருக்கலாம்.   சுபகாரியங்கள் நடந்திருக்கலாம்.  பெற்றோர்களின் தொழில் அல்லது பணியில் ஒரு நல்ல முன்னேற்றத்துடன் கூடிய மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.  மரணப்படுக்கையில் இருந்த தாத்தா, பாட்டி கூட, சுகமடைந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரலாம்.  இப்படி நிறைய சுபங்கள் அந்த குடும்பத்தில் நடந்திருக்கும்.  நடந்துகொண்டிருக்கும்.  நடக்கும்.  இதனால் குழந்தை பிறந்த யோகம் என்று அந்த குழந்தையை எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடுவர்.  : ..................  சில குடும்பத்தில் மேற்கண்ட நிகழ்வுகளுக்கு நேர்மாறாக நடந்து துன்பங்களும் துயரங்களும் பிறந்த குழந்தையால் விளைந்திருக்கலாம்.  இப்படிப்பட்ட குழந்தைகளிடன் குடும்பத்திலுள்ள அனைவரும் பாசக்குறைவாக நடந்துகொள்வர்.  இதனால் பெற்றோரின் வெறுப்புக்கு ஆளான குழந்தைகளும் உண்டு.  ஆக ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தை பிறந்த நேரம் பெற்றோர்களுக்கும் அந்த குடும்பத்துக்கும் ஒரு திருப்பத்தை தருகிறது.  இது எவ்வாறு நிகழ்கிறது? என்பதை ஜோதிடரீதியாக பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம்.  பிறக்கப்போகும் குழந்தை, அதிர்ஷ்டகரமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, இப்படிப்பட்ட குழந்தைதான் வேண்டும் என்று நாம் பெற்றுக்கொள்ளமுடியாது.  அது இறைவனால் அருளப்படுவது.  எதுவாயினும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவத்தோடு இந்த பதிவை அணுக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.  நாம் பெறும் குழந்தையால் நமக்கு கிடைக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும், போன பிறவியில் நாம் செய்த புண்ணிய பாவங்களே.  இதனால்தான் ஜோதிட சாஸ்த்திரம், புத்திர பாக்கியத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தை அடையாளம் காட்டுகிறது. 

அடிமைத்தொழில் புரிந்துவரும் ஒரு கடும் உழைப்பாளி.  நடுத்தர குடும்பத்தை விட தாழ்ந்த நிலையில் குடும்பத்தை நடத்திக்கொண்டிருப்பவர்.  இவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.  5 ஆம் அதிபதி லக்னத்தில் இருக்க, லக்னாதிபதி லாபத்தில் இருக்க, இருவரும் கெடாமல் சுபகரமாய் இருக்கும் நிலையில் உள்ள ஜாதக அமைப்பு குழந்தைக்கு அமைகிறது.  இரண்டுமே சுபாவ சுபகிரகங்கள் எனக்கொள்வோம்.  அவைகளின் பார்வை முறையே 7 லும், 5 லும் பதியும்.  இதன் பலனாக குழந்தைக்கு திடீர் பனவரவு, செய்யும் தொழில், அல்லது பணியில் அதிக லாபம் ஆகியன பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டும்.  கிரகங்கள் இதை தவறாமல் குழந்தைக்கு கொடுத்தாக வேண்டும்.  குழந்தைக்கு பணம் என்றால் என்ன? என்று தெரியாது.  இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும் என்று ஆசைப்படப்போவதுமில்லை.  ஆனால் வறுமை வந்தால் மட்டும், அதன் வலியை அனுபவித்து வேதனைப்படும்.  அந்த வேதனைக்குரிய காரணமும் அதற்கு தெரியாது.  அதுபோல் தொழில், பணி, வருமானம் இதையும் குழந்தை அறியாது.  ஆனால் கிரகங்கள் செல்வ செழிப்பை தந்தாக வேண்டும்.  தந்தையோ அடிமை தொழில் மற்றும் நடுத்தர நிலையை விட தாழ்ந்த பொருளாதாரம் கொண்டவர்.  குழந்தையால் தொழில், பணி செய்து நல்ல லாபத்தை அடைந்து, திடீர் பணவரவை செய்து கொள்ள முடியாது, என்பதால் அந்த யோகத்தை, கிரகங்கள் தந்தைக்கு தந்து விடும்.  அடிமைதொழில் புறிந்த தந்தை, விறுவிறுவென முன்னேரி சுயதொழில் புரிந்து, நல்ல வருமானமும், பெருத்த பணவரவையும் சந்திப்பார்.  செல்லக்குழந்தையை பெற்றோர்கள் சீராட்டி பாராடி வளர்ப்பர்.  குழந்தையும் நல்ல குதூகலத்துடன், எவ்வித பஞ்சமுமின்றி வளரும்.

குழந்தையின் சுபயோக அமைப்பை விட பெற்றோரின் அவயோக அமைப்பு அதிக வலுவுடன் இருந்தால், பெற்றோரால் முன்னேற முடியாது.  இந்த சூழ்னிலையில், நல்ல செல்வாக்குடன் இருக்கும் குடும்பத்திற்கு, குழந்தையை கிரகங்கள் மாற்றிவிடும்.  யோக காலம் முடியும் வரை அந்த குழந்தை, செல்வசெழிப்புடன் வாழக்கூடிய தாய்மாமன், அத்தை அல்லது தாத்தா, பாட்டி போன்ற உறவினர் குடும்பத்தில் வாழ்ந்து வரும்.  குழந்தையின் யோக ஜாதக அமைப்பு, பெற்றோரின் ஜாதக அமைப்பு ஆகிய இரண்டில் எது வலுவானது? என்று ஒரு ஜோதிடர் மிக சரியாக தீர்மானித்துவிடுவார்.  [ இதற்கான விரிவான விளக்கத்தை அடுத்த பதிவில் நாம் பார்ப்போம். ].

இதுவே நேர்மாறாக அமையக்கூடிய சூழ்னிலை கொண்ட குடும்பங்களும் உண்டு.  குழந்தையின் அவயோக அமைப்பு, அதை வறுமையில் வாட்டி எடுக்க வேண்டிய விதியிருந்தால், பெற்றோரின் பொருளாதார வரத்துகளை எல்லாம் முடக்கிப்போட்டுவிடும்.  பெற்றோரின் யோகத்தை விட குழந்தையின் அவயோகம் வலுவுடன் இருந்தால் இவ்வாறு நடக்கும்.  இத்தகைய சூழ்னிலையில், குழந்தையை பெற்றோர்கள் பிரிந்திருக்க வேண்டும் என்று ஜோதிடர்களே ஆலோசனை சொல்வதுண்டு.  இது பெற்றோரின் நலன் கருதி சொல்லப்படுகிறது.  பெற்றோரின் மனசாட்சி உறுத்தினல், என்ன நடந்தாலும் அவர்கள் குழந்தையை பிரிவதில்லை.  பெற்றோர்கள் குழந்தைக்காக செய்யும் எத்தனையோ வகை தியாகங்களில் இதுவும் ஒன்று.  குழந்தையின் அவயோகத்தை விட பெற்றோர்களின் யோகம் வலுவாக இருந்தால், குழந்தை நோய்வாய்ப்படும்.  ஆனால் பெற்றோர்கள் செல்வசெழிப்புடன் இருப்பதால், செலவு செய்து மருத்துவம் செய்வார்கள்.  பரிகார வழிபாடுகளையும் செய்வார்கள்.  ஆனால் மனத்துயர் என்று ஒன்று இருக்குமல்லவா!  அதிலிருந்து மீள முடியாது.  குழந்தையும், தனக்கிருக்கும் அவயோகத்தின் காரணமாக, நோயின் துன்பத்தை தாங்கிக்கொண்டாக வேண்டும்.

பெற்றோர், குழந்தை இருவருக்குமே நடப்பில் அவயோகமாக இருந்தால், ஜோதிடர்கள் தத்து கொடுக்க சொல்லி பரிந்துரைப்பார்கள்.  முக்கியமாக பெற்றோ ஸ்தானங்கள் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அவசியம் தத்து கொடுத்தாக வேண்டும்.  அதுவே இருவருக்கும் நல்லது.  வாழ்க்கையில் திருமணம் ஒரு திருப்புமுனையென்றால், குழந்தை பிறப்பு அதைவிட இன்னொரு திருப்புமுனையாக அமைகிறது.  நன்றி.  வணக்கம்.  [ ...............  தொடரும் .................  ] 

     

Tuesday 27 September 2016

். " திதிசூன்ய பலன் ", : சென்ற பதிவின் தொடர்ச்சி. : ..............



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " திதிசூன்ய பலன் ", : ................  சென்ற பதிவின் தொடர்ச்சி.  : ..............  பாரம்பரிய முறை.  திதிசூன்யம் சம்பந்தமாக மொத்தம் 3 பட்டியல்கள் உள்ளன.  1 ஆவது பட்டியல் பற்றிய முழுவிபரங்களை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.  இனி இந்த பதிவில் 2 ஆவது பட்டியலை இப்போது பார்க்கலாம்.  இந்த பட்டியலில், திதி மற்றும் சூன்யநக்ஷத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  1 ஆவது பட்டியலில் திதி, சூன்யராசி, ராசிக்குரிய கிரகம் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தன.  சூன்யராசியிலேயே நக்ஷத்திரங்கள் அடக்கம்.  அப்படியிருக்கும் போது மீண்டும் சூன்ய நக்ஷத்திரம் என்று ஏன்? கொடுக்கப்பட வேண்டும் என்று சற்று யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும்.  பிரதமை திதியில் உத்திராடம் சூன்யமடைகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.  பிரதமை திதியும் உத்திராடம் நக்ஷத்திரமும் சேர்ந்த நாள் சுபகாரியத்திற்கு உதவாது என்றும் சிலர் இதன் பொருளாக கொள்கிறனர்.  எந்த சுபகாரியத்திற்கும் பிரதமை திதி உதவாது என்று திதியே ஒதுக்கப்பட்டிருக்கும் போது, மீண்டும் இந்த மாதிரி ஒரு விதி தேவையா? என்று எண்ண தோன்றும்.  இது நியாயமானதே.  பிரதமையன்று உத்திராடம் தவிர மற்ற நக்ஷத்திரம் இணைந்தால் சுபகாரியம் செய்யலாம் என்றும் மறைமுகமாக இந்த விதி உணர்த்துவது போலவும் தோன்றும்.  திதிசூன்ய ராசிக்குரியவர்கள், தன் காரகத்துவத்தை இழப்பார்கள், என்பது போல, திதிசூன்யனக்ஷத்திரத்துக்குரியவர்கள் தங்கள் காரகத்துவங்களை இழப்பார்களா? என்று சிலருக்கு எண்ணம் உருவாகலாம்.  மேற்கண்ட சிந்தனைகளையெல்லாம் சற்றே மாற்றியமைத்துக்கொண்டால் போதும், மிக சரியான பலனை நாம் தெரிந்துகொண்டு விடலாம்.

 பிரதமை திதியன்று பிறந்தவர்களுக்கு சுபகாரியங்கள் செய்ய உத்திராடம் நக்ஷத்திரம் ஆகாது என்பதே சரியான பொருளாகும்.  பிரதமை திதியில் உத்திராடம் சூன்யமடைவதால், உத்திராடத்திற்குரிய காரகத்துவங்களும் சூன்யமடையும்.    உத்திராட நக்ஷத்திரத்திற்கென்று சாஸ்த்திரங்களில் பலன் சொல்லப்பட்டுள்ளது.  அவைகள் பிரதமை நாளன்று, பிரதமையில் பிறந்தவர்களுக்கு நடவாமல் போகும்.  இப்படியும் பொருள் கொண்டு பலன் சொல்லலாம்.  பொதுவாக திதிசூன்ய நக்ஷத்திர நாளன்று சுபகாரியங்களை தவிர்ப்பது உத்தமம்.  இந்த 2 ஆவது பட்டியல் பற்றி எந்த ஜோதிட பலன் சொல்லும் சாஸ்த்திரமும் எதையும் சொல்லவில்லை.  சுபமுஹூர்த்தம் குறிக்க வழிகாட்டியாக இருக்கும் நூல்களில் மட்டுமே இதை பற்றிய குறிப்புகள் உள்ளன.  மேலும் இந்த பட்டியலுக்கான பலனை இந்த நூல்களில் மேலோட்டமாகவே சொல்லப்பட்டுள்ளது.  இதனால்தான் ஜோதிடர்கள் தத்தம் ஞானத்தால், தாங்களறிந்த பலனை சொல்லி வருகிறார்கள்.

இனி 3 ஆவது பட்டியல் பற்றி பார்க்கலாம்.  இந்த பட்டியலுக்கு மாதசூன்யதோஷம் என்று " முஹூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம் ", என்னும் நூல் குறிப்பிடுகிறது.  இதுவும் முஹூர்த்தனாள் குறிக்க உதவுமே தவிர, ஜாதக ஜோதிட பலன் சொல்ல உதவாது.  இந்த பட்டியலில், மாதம், திதி, நக்ஷத்திரம், ராசி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது சித்திரை / அஷ்டமி, ஏகாதசி / அஸ்வினி, ரோகிணி / கும்பம் என்று உள்ளது.  இதற்கு விளக்கமாக, சித்திரை மாதத்துக்கு சொல்லப்பட்டுள்ள, திதி, நக்ஷத்திரம், சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்று கொடுக்கப்[பட்டுள்ளது.  பட்டியலில் ராசியை பற்றி குறிப்பிட்டிருந்தாலும், அது ஏன்? எதற்கு? என்ற ஒரு குறிப்பு கூட இல்லை.   இதிலிருந்து நாமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ; ............., மேற்கண்ட திதியன்று பிறந்தவர்கள், சித்திரை மாதத்தில், அஸ்வினி, ரோகிணி நக்ஷத்திரத்தன்று சுபகாரியங்கள் செய்யக்கூடாது.  செய்தால் கும்பராசிக்குரிய சனியின் காரகத்துவங்கள் செயலிழந்து அதன் மூலம் நமக்கு இழப்பை தரும் என்பதாம்.  இதுவரை, திதிசூன்ய பதிவுகளுக்கு, சொல்ல்ப்பட்ட பலன் அனைத்தும், என் குருனாதரால் எனக்கு உபதேசிக்கப்பட்டு, என் ஜோதிட வாழ்க்கையில் அனுபவித்தறிந்த உண்மைகள்.  இதை என் குருனாதருக்காக நான் நம்பி செய்லபடுத்துகிறேன்.  ஆனால் நீங்கள் யோசித்து, உண்மையறிந்து பின் செயலபடுத்துங்கள்

பஞ்சாங்கங்களில் முஹூர்த்த நாட்கள் குறிக்க விதிமுறைகள் தரப்பட்டுள்ளன.  அவைகள் எல்லோருக்கும் பொதுவானதாகும்.  குறிப்பிட்ட ஜாதகர்களுக்கு, துல்லியமாக நாள் குறிக்க மேற்கண்ட திதிசூன்ய பட்டியல்கள் உதவுகிறன.  மேற்கண்ட, தவிர்க்க வேண்டிய நாட்களில் அறியாமல் பிழை செய்தால் என்ன நேரும்? என்பதை நமக்கு நம் முன்னோர்கள் உபதேசித்திருக்கிறார்கள்.  அவைகளை அறிந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு நாம் அனைவரும் நலமாய் வாழவேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.  பஞ்சாங்கத்தில் உள்ள ஜோதிடவிதிகளில் இந்த சிறப்புத்தன்மை இல்லை.  எனவே ஒரு சுபகாரியத்திற்காக சுபனாள் குறித்து தரும் நாம் அனைவரும், மேற்கண்ட 3 பட்டியல்களையும் பயன்படுத்தி, ஜாதகர்களுக்கு துல்லியமாக நாள் குறித்துதந்து அவர்கள் நல்வாழ்வு வாழ உதவுவோமாக.  அத்துடன் செய்யம் செயல்களுக்கான விளைவுகளையும் முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை தரஃ வேண்டும் : ..................  " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ", :  நன்றி  வணக்கம்.  .