Friday 19 June 2015

" வாக்கியமும், திருக்கணிதமும் ", Part 2



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " வாக்கியமும், திருக்கணிதமும் ",  தொடர் பதிவு.  2.  விண்வெளியில் அலைந்து கொண்டிருக்கின்ற கிரகங்களின் தன்மைகள், நகரும் வேகம், சுழற்சி, செல்லும் பாதை ஆகிய விபரங்களை நமக்கு தெரிவிப்பது வான சாஸ்த்திரம்.  வான சாஸ்த்திரத்தின் மறுவடிவங்களே பஞ்சாங்கங்கள்.  கிரகங்களிலிருந்து வரும் கதிர்வீச்சுகளால் நமக்கு ஏற்படும் விளைவுகளின் நன்மை தீமை, ஆகியனவற்றை நமக்கு தெரிவிப்பது ஜோதிட சாஸ்த்திரம்.  இந்த தகவல்களை சென்ற பகுதியில் விரிவாக பார்த்தோம்.

இந்த வான சாஸ்த்திரத்தை எழுதியவர்கள் அதற்கு சித்தாந்தம், கரணகிரந்தம், வாக்கியகணிதம் என்றெல்லாம், அவரவர்கள் விருப்பத்திற்கிணங்க பெயர்களை இட்டனர்.  இவைகள் ஒவ்வொன்றும் கிரகங்களைபற்றி கொடுத்த தகவல்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவே இருந்தன.  அதாவது கிரக நகர்வு வேகம், சுழற்சி வேகம், செல்லும் பாதை ஆகியவற்றின் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கவில்லை.  இவைகளை பின்பற்றி உருவாக்கப்பட்ட பஞ்சாங்கங்களும், அதன் கணிப்புகளும் ஒரே மாதிரியாக அமையாமல் போயின.  நம் மெய்ஞானிகள் தங்கள் தவவலிமையாலும், ஞானதிருஷ்டியாலும் அறிந்த கணிப்புகளை கொண்டு இந்த வான சாஸ்த்திரங்கள் வெளிவந்தன.  பஞ்சாங்க கணிப்பாளர்கள் அவரவர்க்கு சிறந்தவர்களாக தோன்றிய மெய்ஞானிகளின் வானசாஸ்த்திரங்களை பின்பற்றி பஞ்சாங்கங்களை உருவாக்கினர்.  எனவே அக்காலத்திலேயே பஞ்சாங்கங்கள் ஒன்றுகொன்று வித்தியாசமாகவே இருந்தன.  ஜோதிடர்களும், தாங்கள் விரும்பி போற்றக்கூடிய மெய்ஞானிகள் வழிவந்த பஞ்சாங்கங்களை விரும்பி வாங்கி பயன்படுத்தலாயினர்.  இந்த நடைமுறை இன்று வரை தொடரப்பட்டு வருகிறது.  அக்காலத்தில் மெய்ஞானிகள் நமக்கு கணித்து தந்த வானசாஸ்த்திர கணிதங்களை இன்று வரை பயன்படுத்தி வெளியிடப்படும் பஞ்சாங்கங்களே " வாக்கிய பஞ்சாங்கங்கள் ", எனப்படுகிறன.  இதிலிருப்பவை மெய்ஞானிகளால் வகுத்து தரப்பட்ட கணிதங்கள் என்பதால், மெய்ஞான வடிவாக திகழும் திருக்கோவில்கள் வாக்கிய பஞ்சாங்கங்களை பின்பற்றி வருகிறன.

அன்றாடம் விண்வெளியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது நாம் சாதாரணமாக அறிந்திருக்கும் ஒரு உண்மை.  அதுபோல், காலப்போக்கில், கிரகங்களின் நகர்வு வேகம், சுழற்சி வேகம், நகரும் பாதை ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று விஞ்ஞானம் நிரூபித்தது.  விஞ்ஞானிகள் வெளியிட்ட கிர்கங்களை பற்றிய தகவல்களிலும் நிறைய மாற்றங்கள் இருந்தன.  இந்த மாற்றங்களையும், பஞ்சாங்கங்களில் கொண்டு வந்து கணிக்கவேண்டும் என்று விரும்பியவர்கள் கணித்து வெளியிடும் பஞ்சாங்கங்களே " திருக்கணித பஞ்சாங்கங்கள் ", எனப்படுகிறன.  சென்னையிலிருந்து வெளியாகும் வாசன் பஞ்சாங்கம், தன் கடைசி அட்டையின் உட்புறம், இது சம்பந்தமாக ஒரு அறிக்கையையும் வெளியிடுகிறது.  அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

"  சூரியனும் சந்திரனும், பூமியும் ஆகர்ஷண சக்தியால், [ கிராவிடேஷன் ] ஒன்றுக்கொன்று இழுப்பதாலும், சந்திரனுடைய துங்கன் [ மூன்ஸ் அபாஜி, மூன்ஸ் ஆப்ஸ்லைன் ] நிலையை அனுசரித்து, சந்திரன் துங்க மண்டலத்தில் பாதை [ மூன்ஸ் ஆர்பிட் ] அப்போதுக்கப்போது வித்தியாசப்படுவதாலும், இதர கிரகங்களின் ஆகர்ஷண சக்தியால் சந்திரனுக்குண்டாகும் அசைவினாலும் சந்திரனுக்கு கதிபேதம் [ வேரியேஷன் இன் மோஷன் ] ஏற்படுகின்றது.  இவைகளை [ வேரியேஷன், எவக்ஷன், ப்ளேனிடேரிபெர்டேர்பேஷன் ] வாக்கிய கணணம் ஏற்பட்ட காலத்தில் நம் தேசத்தார் கண்டுபிடிகாததால், வாக்கிய கணிதத்தில் சேர்க்கவில்லை.  திருக்கணிதத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  அதனால் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும், திதி, நக்ஷத்திரம் முதலியவைகளின் நாழிகைகளில், அமாவாசை, பருவம், இவைகளை நெருங்கியிருக்கும் காலங்களில் கொஞ்சம் வித்தியாசமும், மற்ற காலங்களில் சுமார் 17 நாழிகை வரையிலும் வித்தியாசமும் நேரிடும். ".

மேற்கண்ட வித்தியாசம் நேர்வதால், வாக்கியப்படி கணிக்கப்படும் ஜாதகங்களுக்கும், திருக்கணிதப்படி கணிக்கப்படும் ஜாதகங்களுக்கும் வித்தியாசம் நேர்கிறது.  வாக்கிய பஞ்சாங்கங்களுக்கும், திருக்கணித பஞ்சாங்கங்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று குழுக்களிலும், என்னிடம் தனிப்பட்ட முறையிலும் சந்தேகங்களை எழுப்பிய வாசகர்களுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.  இந்த இரண்டு பஞ்சாங்கங்களில் எந்த பஞ்சாங்கம் சரியானது?  எதை பயன்படுத்தலாம்? என்றும் கேட்பவர்கள் உள்ளனர்.  அதற்காக கவலைப்படவேண்டியவர்கள் ஜோதிடர்களே.  நன்றி.  வணக்கம்.      

    

Sunday 14 June 2015

.வாக்கியமா? திருக்கணிதமா? Part 1



ம் படைவீட்டம்மா துணை.  எல்லோருக்கும் வணக்கம்.  " வாக்கியமும் திருக்கணிதமும் ", .............ஒரு முன்னுரை..............வாசகர்களுக்கான பதிவு.....................வாக்கியமா? திருக்கணிதமா? இந்த பஞ்சாங்களுக்குள் என்னதான் வித்தியாசம்?  ஜோதிடர்கள் இரண்டையும் வைத்துக்கொண்டு நம்மை குழப்புகிறார்களே! என்ற கேள்விகள் வாசகர்கள் மனதில் பல காலமாக இருந்து வருகிறது.  இதை பற்றி, அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக, அதே நேரம் விரிவாக சொல்வாரில்லை.  எனவே எளியேன் இதில் ஈடுபட்டு அவர்களுக்கு புரிய வைக்க விரிவாக சொல்ல இருக்கிறேன்.  இது இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வரலாம்.  இந்த பதிவுகளில், ஜோதிடம் பயில்பவர்களுக்கோ அல்லது தொடக்க நிலை ஜோதிடர்களுக்கோ தேவைப்படும் அளவுக்கு எந்த விளக்கமும், ஆராய்ச்சியும், நுணுக்கமும் இருக்காது, என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  வாசகர்களுக்கு புரிந்தால் போதும் என்ற நோக்கத்துடன் இந்த பதிவுகளை இடுவதே என்னுடைய குறிக்கோளாகும்.......................இனி நாம் தொடர்வோம்......வாசகர்களே.........

 விண்வெளியில் வெளிச்சமாக, ஜோதியாக நம் கண்களுக்கு புலப்படுகின்ற, நக்ஷத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை தம் கதிர்வீச்சுகளால், நமக்கு பல விளைவுகளை உண்டாக்குகின்றன.  அவற்றில் நல்ல விளைவுகளும், தீய விளைவுகளும் அடங்கும்.  இது போன்ற கதிர்வீச்சுகள், நம் கண்களுக்கு புலப்படாத கிரகங்களிலிருந்தும் நம்மை வந்தடைகின்றன.  சூரியன் நம் கண்களுக்கு புலப்படுகிறது.  அதன் கதிர்வீச்சுகள் வெய்யிலாக நம்மை வந்தடைகிறது.  அது போல் சந்திரனுடைய ஒளியையும் சொல்லலாம்.  குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் நக்ஷத்திரம் போல் நம் கண்ணுக்கு தெரிபவையே.  இதன் கதிர்வீச்சுகளும் நம்மை வந்தடைகின்றன.  புதன், சனி, ஆகிய கிரகங்கள் நம் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும், அதன் கதிர்வீச்சுகளும் நம்மை பாதிக்கின்றன. சூரியனுடைய வெய்யில் சந்திரனாலும், பூமியாலும் தடுக்கப்படுகிற போது அவை நிழலாக மாறுகிறன.  அவைகளையே ராகு, கேது என்கிறோம்.  இந்த நிழல்களாலும் நமக்கு பாதிப்பு விளைகிறது.  இந்த பாதிப்புகளை நமக்கு முன்னதாகவே தெரிவித்து, அதன் நன்மை தீமைகளை எடுத்து சொல்வதே ஜோதிட சாஸ்த்திரமாகும்.  .  விண்வெளியில் இருக்கின்ற நக்ஷத்திரங்கள், கிரகங்கள் பற்றி கூறுவது வான சாஸ்த்திரமாகும்.  இந்த வான சாஸ்த்திரங்களே பஞ்சாங்கங்களாக உருவெடுக்கின்றன.  அதை பற்றி விரிவாக பார்க்கலாம். 

இந்த வானசாஸ்த்திரமானது,  எத்தனை வருஷங்களானாலும், ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றுகின்ற, ஆனால் அவ்வப்போது அசைந்து நகர்ந்துகொண்டிருக்கின்ற நக்ஷத்திரங்களை பற்றி தெரிவிக்கின்றன.  கிரகங்கள் அசைந்து நகர்வதை நம்மால் பார்க்க முடிகிறது.  சந்திரன், குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகியவை விண்வெளியில் ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதில்லை.  அவைகள் இடம் மாறிக்கொண்டே இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.  அது போல் எல்லா கிரகங்களும் அசைந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன.  இவைகளின் அசையும் திசை, கோணம், வேகம், சுழற்சி, ஆகியவற்றோடு இவைகளின் உருவம், அளவு, எந்த பொருட்களால் உருவாகியிருக்கிறது, இந்த அசைவுகளால் இவைகள் தினசரி இருக்கும் இருப்பிடம் ஆகியவற்றை வான சாஸ்த்திரம் நமக்கு எடுத்து சொல்கிறது.  இக்கிரகங்களால் உண்டாகும் விளைவுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நமக்கும் வானசாஸ்த்திர அறிவு தேவைப்படுகிறது.  இவ்வறிவுக்காகவே ஜோதிடர்கள் வானசாஸ்த்திரத்தின் மறுவடிவமாகிய பஞ்சாங்கங்களை நாடுகின்றனர்.  ஒவ்வொரு ஜோதிடருக்கும் தான் கணிக்கும் ஜாதகம் சரியாக அமைய வேண்டுமென்றாலும், சொல்லும் பலாபலன்கள் சரியாக இருக்க வேண்டுமென்றாலும் அவசியம் வான சாஸ்த்திரம் தேவைப்படுகிறது.  அதுபோல் ஜோதிடர் தேர்ந்தெடுக்கும் வான சாஸ்த்திரமும் சரியாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.  வான சாஸ்த்திரங்கள் சரியாக இருக்கிறனவா?  அதன் மறுவடிவங்களான பஞ்சாங்கங்கள் சரியாக இருக்கிறனவா? என்பதை பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.  நன்றி வாசகர்களே.  ................தொடர்வோம்....................