Tuesday 27 September 2016

். " திதிசூன்ய பலன் ", : சென்ற பதிவின் தொடர்ச்சி. : ..............



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " திதிசூன்ய பலன் ", : ................  சென்ற பதிவின் தொடர்ச்சி.  : ..............  பாரம்பரிய முறை.  திதிசூன்யம் சம்பந்தமாக மொத்தம் 3 பட்டியல்கள் உள்ளன.  1 ஆவது பட்டியல் பற்றிய முழுவிபரங்களை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.  இனி இந்த பதிவில் 2 ஆவது பட்டியலை இப்போது பார்க்கலாம்.  இந்த பட்டியலில், திதி மற்றும் சூன்யநக்ஷத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  1 ஆவது பட்டியலில் திதி, சூன்யராசி, ராசிக்குரிய கிரகம் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தன.  சூன்யராசியிலேயே நக்ஷத்திரங்கள் அடக்கம்.  அப்படியிருக்கும் போது மீண்டும் சூன்ய நக்ஷத்திரம் என்று ஏன்? கொடுக்கப்பட வேண்டும் என்று சற்று யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும்.  பிரதமை திதியில் உத்திராடம் சூன்யமடைகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.  பிரதமை திதியும் உத்திராடம் நக்ஷத்திரமும் சேர்ந்த நாள் சுபகாரியத்திற்கு உதவாது என்றும் சிலர் இதன் பொருளாக கொள்கிறனர்.  எந்த சுபகாரியத்திற்கும் பிரதமை திதி உதவாது என்று திதியே ஒதுக்கப்பட்டிருக்கும் போது, மீண்டும் இந்த மாதிரி ஒரு விதி தேவையா? என்று எண்ண தோன்றும்.  இது நியாயமானதே.  பிரதமையன்று உத்திராடம் தவிர மற்ற நக்ஷத்திரம் இணைந்தால் சுபகாரியம் செய்யலாம் என்றும் மறைமுகமாக இந்த விதி உணர்த்துவது போலவும் தோன்றும்.  திதிசூன்ய ராசிக்குரியவர்கள், தன் காரகத்துவத்தை இழப்பார்கள், என்பது போல, திதிசூன்யனக்ஷத்திரத்துக்குரியவர்கள் தங்கள் காரகத்துவங்களை இழப்பார்களா? என்று சிலருக்கு எண்ணம் உருவாகலாம்.  மேற்கண்ட சிந்தனைகளையெல்லாம் சற்றே மாற்றியமைத்துக்கொண்டால் போதும், மிக சரியான பலனை நாம் தெரிந்துகொண்டு விடலாம்.

 பிரதமை திதியன்று பிறந்தவர்களுக்கு சுபகாரியங்கள் செய்ய உத்திராடம் நக்ஷத்திரம் ஆகாது என்பதே சரியான பொருளாகும்.  பிரதமை திதியில் உத்திராடம் சூன்யமடைவதால், உத்திராடத்திற்குரிய காரகத்துவங்களும் சூன்யமடையும்.    உத்திராட நக்ஷத்திரத்திற்கென்று சாஸ்த்திரங்களில் பலன் சொல்லப்பட்டுள்ளது.  அவைகள் பிரதமை நாளன்று, பிரதமையில் பிறந்தவர்களுக்கு நடவாமல் போகும்.  இப்படியும் பொருள் கொண்டு பலன் சொல்லலாம்.  பொதுவாக திதிசூன்ய நக்ஷத்திர நாளன்று சுபகாரியங்களை தவிர்ப்பது உத்தமம்.  இந்த 2 ஆவது பட்டியல் பற்றி எந்த ஜோதிட பலன் சொல்லும் சாஸ்த்திரமும் எதையும் சொல்லவில்லை.  சுபமுஹூர்த்தம் குறிக்க வழிகாட்டியாக இருக்கும் நூல்களில் மட்டுமே இதை பற்றிய குறிப்புகள் உள்ளன.  மேலும் இந்த பட்டியலுக்கான பலனை இந்த நூல்களில் மேலோட்டமாகவே சொல்லப்பட்டுள்ளது.  இதனால்தான் ஜோதிடர்கள் தத்தம் ஞானத்தால், தாங்களறிந்த பலனை சொல்லி வருகிறார்கள்.

இனி 3 ஆவது பட்டியல் பற்றி பார்க்கலாம்.  இந்த பட்டியலுக்கு மாதசூன்யதோஷம் என்று " முஹூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம் ", என்னும் நூல் குறிப்பிடுகிறது.  இதுவும் முஹூர்த்தனாள் குறிக்க உதவுமே தவிர, ஜாதக ஜோதிட பலன் சொல்ல உதவாது.  இந்த பட்டியலில், மாதம், திதி, நக்ஷத்திரம், ராசி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது சித்திரை / அஷ்டமி, ஏகாதசி / அஸ்வினி, ரோகிணி / கும்பம் என்று உள்ளது.  இதற்கு விளக்கமாக, சித்திரை மாதத்துக்கு சொல்லப்பட்டுள்ள, திதி, நக்ஷத்திரம், சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்று கொடுக்கப்[பட்டுள்ளது.  பட்டியலில் ராசியை பற்றி குறிப்பிட்டிருந்தாலும், அது ஏன்? எதற்கு? என்ற ஒரு குறிப்பு கூட இல்லை.   இதிலிருந்து நாமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ; ............., மேற்கண்ட திதியன்று பிறந்தவர்கள், சித்திரை மாதத்தில், அஸ்வினி, ரோகிணி நக்ஷத்திரத்தன்று சுபகாரியங்கள் செய்யக்கூடாது.  செய்தால் கும்பராசிக்குரிய சனியின் காரகத்துவங்கள் செயலிழந்து அதன் மூலம் நமக்கு இழப்பை தரும் என்பதாம்.  இதுவரை, திதிசூன்ய பதிவுகளுக்கு, சொல்ல்ப்பட்ட பலன் அனைத்தும், என் குருனாதரால் எனக்கு உபதேசிக்கப்பட்டு, என் ஜோதிட வாழ்க்கையில் அனுபவித்தறிந்த உண்மைகள்.  இதை என் குருனாதருக்காக நான் நம்பி செய்லபடுத்துகிறேன்.  ஆனால் நீங்கள் யோசித்து, உண்மையறிந்து பின் செயலபடுத்துங்கள்

பஞ்சாங்கங்களில் முஹூர்த்த நாட்கள் குறிக்க விதிமுறைகள் தரப்பட்டுள்ளன.  அவைகள் எல்லோருக்கும் பொதுவானதாகும்.  குறிப்பிட்ட ஜாதகர்களுக்கு, துல்லியமாக நாள் குறிக்க மேற்கண்ட திதிசூன்ய பட்டியல்கள் உதவுகிறன.  மேற்கண்ட, தவிர்க்க வேண்டிய நாட்களில் அறியாமல் பிழை செய்தால் என்ன நேரும்? என்பதை நமக்கு நம் முன்னோர்கள் உபதேசித்திருக்கிறார்கள்.  அவைகளை அறிந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு நாம் அனைவரும் நலமாய் வாழவேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.  பஞ்சாங்கத்தில் உள்ள ஜோதிடவிதிகளில் இந்த சிறப்புத்தன்மை இல்லை.  எனவே ஒரு சுபகாரியத்திற்காக சுபனாள் குறித்து தரும் நாம் அனைவரும், மேற்கண்ட 3 பட்டியல்களையும் பயன்படுத்தி, ஜாதகர்களுக்கு துல்லியமாக நாள் குறித்துதந்து அவர்கள் நல்வாழ்வு வாழ உதவுவோமாக.  அத்துடன் செய்யம் செயல்களுக்கான விளைவுகளையும் முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை தரஃ வேண்டும் : ..................  " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ", :  நன்றி  வணக்கம்.  .          

1 comment:

  1. Please let me know your contact details for horoscope consultation

    ReplyDelete