Sunday 4 October 2015

அந்தணன் இருக்குமிடம் பாழா?............................பகுதி 3



அமரர் பி.எஸ்.ஐயர் ஜோதிட ஆராய்ச்சி மையமும், உலக தமிழ் ஜோதிடர்கள் மஹாசபையும் இணைந்து நடத்திய 5 ஆவது கருத்தரங்கில் வெளியிடப்பட்ட விழா மலரில் இடம் பெற்ற எளியேனின் கட்டுரை இது. ................... இறுதி பகுதி.

எனவே 2 ஆமிடத்திற்குரிய குடும்ப நிதி நிர்வாக உபகாரகனான குரு இருக்குமிடத்தை முதல் ஸ்தானமாக கொண்டு அதன் 2 ஆமிட நிலையை கொண்டு பலன் சொல்ல வேண்டும்.  .............சரி....... லக்னம் வலுவிழந்தால், சந்திராலக்னம் கொண்டு பலன் சொல்லலாம்.  சந்திரால்க்னம் வலுவிழந்தால், உபகாரகனை கொண்டு பலன் சொல்லலாம்.  உபகாரகனும் வலுவிழந்திருந்தால் என் செய்வது? என்ற கேள்வி எழலாம்.  உபகாரகன் நீசம், அஸ்தங்கம் போன்ற நிலைகளில் சிக்கி இருந்தால் என்ன செய்வது?................. அபூர்வமாக ஒரு சில ஜாதகங்களுக்கே இந்த நிலை ஏற்படும்.  பெரும்பாலும் உபகாரகர்களை கொண்டு பலன் சொல்லும் அளவுக்கு வலுவிழந்த ஜாதகங்கள் வருவதில்லை.  உங்கள் அனுபவத்திலும் இதை சோதித்து பார்க்கலாம்.  இப்படி உபகாரகர்கனை கொண்டு பலன் சொல்லும் ஜாதகங்களுக்கு, 2, 5, 9, 10, 11 ஆகிய ஸ்தானம் சம்பந்தப்பட்ட பலன் சொல்ல குரு பெருதும் உதவுகிறார்.  எனவே அந்தணன் எனப்படும் குரு இருக்குமிடம் பாழ் என்று உடனடியாக முடிவுக்கு வந்துவிடமுடியாது. 

இந்த கட்டுரைக்கு சம்பந்த்மில்லாத ஒரு சந்தேகம் இந்த கட்டுரையை படிக்கும் போது சிலருக்கு எழலாம்.  அந்தணன் எனும் குரு இருக்குமிடம் பாழ் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று சிந்திக்கும் இந்த கட்டுரையில், சந்திரனையும் கொஞ்சம் பார்க்க வேண்டியிருக்கிறது.  லக்னம் வலுவிழந்தால் பலன் சொல்ல சந்திராலக்னம் கை கொடுக்கும்.  சந்திராலக்னம் வலுவிழந்தால் உபகாரகன் கை கொடுப்பார்.  சந்திராலக்னம் வலுவிழக்கிறது என்றால், சந்திரனும் வலுவிழந்தார் என்று ஆகிறது.  சந்திராலக்னத்திற்கு அடுத்தபடியாக உபகாரகனை பார்க்கும் போது அது சந்திரனாக இருந்தால் என்ன செய்வது?  உதாரணத்திற்கு குடும்பம், வாக்கு, நிதி, நேத்திரம் என்ற வரிசையில், குடும்பத்திற்கு உபகாரகன் சந்திரனாவார்.  லக்னப்படியும், சந்திராலக்னப்படியும் பலன் சொல்லமுடியாத சூழ்னிலையில், குடும்ப உபகாரகனாக வலுவிழந்த சந்திரன் இருக்குமிடத்தை எவ்வாறு முதல் ஸ்தானமாக கொள்ள முடியும்?  இப்படிப்பட்ட சூழ்னிலையில் குடும்ப உபகாரகனாக புதனை கொள்ள வேண்டும் என்று பிருஹத் பராச்சாரியம் சொல்கிறது.  அதுபோல், 4 ஆமிடத்தை கொண்டு தாயார் நிலை அறிய முற்படும்போது, லக்னமும், சந்திராலக்னமும் வலுவிழந்திருந்தால், உபகாரகனாக சந்திரன் இருக்குமிடத்தை முதலாக கொள்ள முடியாது.  சந்திரன் வலுவிழந்து போவதால் சந்திராலக்னம், முதலாம் ஸ்தானம் என்ற அந்தஸ்து பெறும் வாய்ப்பை இழக்கிறது.  இன்னிலையில் உபகாரகன் இருக்குமிடம் முதல் ஸ்தானம்கா கொள்ளவேண்டுமென்றால் சுக்கிரனை, தாயாருக்கு உபகாரகனாக கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் சந்சிராலக்னத்திற்கு வலுவற்ற நிலை ஜாதகங்களுக்கு ஏற்படுவதில்லை.  ஏதேனும் ஒரு வகையில் அது வலுப்பெற்று விடும்.  அதை நுட்பமாக கவனிக்க வேண்டியது ஜோதிடர்களாகிய நமது பொறுப்பு.  இனி கட்டுரையின் கடைசி பகுதிக்கு செல்வோம்.

குரு நீசம், அஸ்தங்கம் பெறுவதாலும், மற்ற கிரகங்களைப்போல் அசுபஸ்தானாதிபத்தியம் பெறும்போதும், தானிருக்கும் இடத்தை பாழ் செய்தாக வேண்டும்.  இது குருவின் குறையல்ல.  " காரகோ பாவநாஸ்தி ", என்ற அடிப்படையில் 2, 9, 10, ஆகிய ஸ்தானங்களை பகுதியாக மட்டுமே பாழ் செய்வார்.  5, 11 ஆகிய இரு ஸ்தானங்களை மட்டுமே முழுமையாக பாழ் செய்வார்.  குரு புத்திரகாரகன் என்பதால் 5 ஆமிடத்தின் ஒரு காரகத்துவமாகிய புத்ர காரகத்துவத்தை மட்டுமே பாழ் செய்வார் என்று சொல்கிறார்கள்.  குருவின் பொதுவான முக்கியமான காரகத்துவம் புத்ரபாக்கியம் என்று கூறப்படுகிறது.  ஆனால் 5 ஆமிடத்திற்கு குருவே முழுக்காரகன்.  5 ஆமிடத்திற்கு உபகாரகர்கள் இல்லை.  எனவே குரு 5 ல் அமர்ந்தால் அதை முழுமையாக பாழ் படுத்துவார். 

இந்த விஷயத்தில் நாம் மகளிர் ஜாதகத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.  மகளிருக்கு புத்ரபாக்கிய ஸ்தானம் 9 ஆமிடமாக அமைகிறது.  எனவே குரு 9 ல் அமர்ந்தால் மகளிருக்கு புத்ரபாக்கிய காரகத்துவத்தை பாழ் செய்துவிடுவார்.  அப்பிரதஷிண முறைபடி இந்த 9 ஆம் ஸ்தானம் மகளிருக்கு புத்ரபாக்கிய ஸ்தானமாக அமைகிறது.  அதாவது இதை பூர்வபுண்ணிய ஸ்தானமாக கொள்ள வேண்டும்.  பாக்கிய ஸ்தானமாக 5 ஆமிடத்தை கொள்ள வேண்டும்.  மகளிர் ஜாதகத்தை பொறுத்தவரை இம்மாறுதல் உண்டு.  இம்முறைப்படி திரிகோணங்களின் காரகத்துவங்கள் மட்டுமே மாறுபடுகின்றன.  5 ஐ 9 ஆகவும், 9 ஐ 5 ஆகவும் கொள்ள வேண்டும்.  இதை அனுபவத்திலும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.  எனவே மகளிரை பொறுத்தவரை 5 ஆமிடம் பாக்கிய ஸ்தானமாகிறது.  பாக்கிய ஸ்தானத்தில் குரு அமரும்போது, அதன் உபகாரகத்துவமான தர்மம் சம்பந்தப்பட்ட காரகத்துவங்களை மட்டும் குரு பாழ் படுத்துவார்.  தந்தைக்குரிய அதன் காரகத்துவங்கள், வழக்கம்போல், பகலில் பிறந்தோர்க்கு சூரியனை பொறுத்தும், இரவில் பிறந்தோர்க்கு சனியை பொறுத்தும் மாறுபடும்.  இவ்விதமாக குருவின் பொதுக்காரகத்துவ, உபகாரகத்துவ தன்மைகளை பொறுத்தே அவர் இருக்குமிடத்தில், அவரால் ஏற்படுத்தப்படும் பாழ் தன்மையை கணிக்கவேண்டும்.  எனவே அந்தணன் எனும் குரு இருக்குமிடம் பாழ் என்று முடிவெடுப்பதில் நமக்கு மிகவும் கவனம் தேவை.  நாம் கவனத்துடன் செயல்பட்டு, வரும் ஜாதகர்களுக்கு, முடிந்த வரை சரியான பலன் உரைத்து, நற்பெயர் பெற இறைவன் அருள் புரிவானாக.  நன்றி   வணக்கம்.

*******  முக்கிய குறிப்பு  ******  மகளிர் ஜாதக சிறப்பு விதியை என் குருநாதர் உபதேசப்படி எழுதியிருக்கிறேன்.  இதில் உடன்பாடு இல்லாதவரகள், தயவுசெய்து இந்த பகுதியை தவிர்த்துக்கொள்ளுங்கள்.     

No comments:

Post a Comment