Friday 19 December 2014

திருமண காரியம் தொடங்கும் முன் பெற்றோரின் கடமைகள்.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  திருமண காரியம் தொடங்கும் முன் பெற்றோரின் கடமைகள்.  வாசகர்களுக்கான பதிவு இது.  எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கினாலும், தெய்வத்தின் திருவருளோடு, சுற்றத்தார் ஆதரவோடு, எந்த வித தங்கு தடையின்றி நடந்து முடியும்போது அந்தன் ஆனந்தமே அளவிட முடியாதது.  அதற்க்காக கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை ஜோதிட ரீதியாக எடுத்து சொல்லும் பதிவாக இது அமைகிறது.  இந்த கட்டுரை, பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பவர்களுக்காகவும், பிள்ளைக்கு பெண் பார்ப்பவர்களுக்குமாகவும் பொதுவாக எழுதப்பட்டது.  எனவே மகனுக்கு திருமண்ம் செய்ய விரும்புவர்கள், வரன் என்று உள்ள இடத்திலெல்லாம், பெண் என மாற்றியமைத்து வாசிக்க வேண்டுகிறேன்.   

முதலில் நாம் திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைக்கு கல்யாண திசை வந்து விட்டதா? என் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.  கல்யாண திசை வந்த பின் சுப காரியத்தை தொடங்கினால், தெய்வத்தில் ஆசி, சுற்றத்தார் ஆதரவு, ஆகியன கிடைக்கும்.  வரன் எளிதில் அமையும்.  நிதிச்சுமை இருக்காது.  பொதுவாக எந்த குறையுமில்லாமல், சுப காரியமானது நிறைவாக நடக்கும்.

கல்யாண திசை வந்து விட்டது என்றால், முதலில் பித்ருக்கள் வழிபாடு, குல தெய்வ வழிபாடு, திருமனம் செய்து கொள்ள இருப்பவரின் இஷட தெய்வ வழிபாடு ஆகியவற்றை குறைவின்றி நிறைவேற்றிவிட வேண்டும்.  கல்யாண திசையில் ஏதேனும், சிறு தடைகள் இருப்பின், அதற்கான பரிகார வழிமுறைகளையும் முடித்து விட வேண்டும்.  இக்கால கட்டத்தில் ஜோதிடரை அணுகும் போது பெற்றோர்கள் ஜோதிடரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்களாவன....................

  காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கும் திருமணமா?  வரன் அமைவது உறவா?  அன்னியமா?    உறவு என்றால் யார் மூலமாக் வரன் தேடுவது?    அன்னியம் என்றால் சொந்த முயற்சியில், அல்லது தரகர் மூலம், அல்லது இணையதள மூலம் தேடலாமா?    வரனின் அடையாள எப்படி இருக்கும்?  [ உருவம், கல்வி, வசதி, தேடவேண்டிய திசை, தொலைவு ஆகியவை....................] 

மேற்கண்ட தகவல்களை வைத்து வரன் தேடினால் விரைவில் கிடைத்துவிடும்.  இதன் பின் கிடைத்த வரன் ஜாதகத்திற்கு பொருத்தம் பார்ப்பது அடுத்த கடமை.  பொருத்தம் பற்றிய அதிக விபரங்கள் தெரிந்துகொள்ள என் பிளாக் ஸ்பாட் பாருங்கள்.  முகவரி. www.josyamramu.blogspot.com  " தானாகவே திருமண பொருத்தம் பார்த்துகொள்பவர்களுக்கான பதிவு ?, என்ற கட்டுரை 2014, ஃபெப்ரவரி பகுதியில் உள்ளது.  இப்படி ஒரு முழுமையான பொருத்தம் பார்த்துகொள்வதன் மூலம், பொருந்தும் தம்பதியர்க்கு, வம்சவிருத்தி, குடும்பஒற்றுமை, அன்யோன்யம், ஆகியன நல்ல முறையில் அமையும். 

பின் கூடுமானவரை குறை இல்லாத நிறைவான நல்ல நாளில் திருமணம் வைத்துகொள்வது இன்னும் நல்லது.  நல்ல நாள் பார்ப்பதில், நாள்  [ இதில் கரினாள், ஜீவ, நேத்திர நாட்கள் அடங்கும் ], நக்ஷத்திரம், திதி, லக்னம், சந்திராஷ்டமம், அமிர்தாதியோகம், குரு, சுக்கிர மூடம் ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.  இதில் குறை ஏற்படுவதால், விவாகரத்து, புத்ரபாக்கியமின்மை, ஆகியன ஏற்படுகிறன.  இவைகளையெல்லாம் தவிர்க்கப்படுவதற்காகவே, மேற்கண்ட வழிமுறைபடி திருமண செயல்பாடுகளை திட்டமிட்டால், எல்லாம் இறைவன் திருவருளால் நிறைவாக கை கூடும்.  நன்றி.



1 comment:

  1. நல்ல கருத்துக்கள் . குளிகை காலத்தில் செய்யும் திருமணம் விவாஹரத்தில் முடிகிறது. நன்றி ஐயா

    ReplyDelete