Sunday 9 February 2014

புத்ர பாக்யம் சம்பந்தமாக வருத்தத்தில் இருப்பவர்களுக்கான பதிவு



புத்ர பாக்யம் சம்பந்தமாக வருத்தத்தில் இருப்பவர்களுக்கான பதிவு இது.

விவாஹ தசவித பொருத்தம் பார்க்கும்போதுதான் இது சம்பந்தமான கேள்வி எழும். ராசி மற்றும் ராசியதிபதி பொருத்தம், இதை பற்றி ஓரளவுக்கு அறிவித்துவிடும். அதன்பின் ஜாதககட்டம், மீதம் இருப்பதை தெரிவித்துவிடும். பொருத்தம் பார்க்கும் இலக்கணங்களை சரியான முறையில் அனுசரித்தால், இவ்விஷயத்தில் கல்யாணமான பிறகு, தொடர்கின்ற நல்ல செய்திகளால் மகிழ்ச்சியா இருக்கலாம். இல்லையென்றால்.........................

இப்படிப்பட்ட சூழ்னிலையில் புத்ரபாக்யத்திற்காக பெண்ணின் ஜாதகம் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. ஒரு சில ஜோதிடர்களும் இதற்கு உடன்பட்டு பலனும் சொல்லுகிறனர். சில நேரம் உச்சகட்ட பரிகாரங்களையெல்லாம் சொல்லிவிடுகிறனர். இது தவறான அணுகுமுறையாகும். இந்த முறையை நல்ல அனுபவமுள்ள, விபரமான, திறமையான ஜோதிடர்கள் அனுசரிப்பதில்லை.

கணவனும், மனைவியும் இணைந்து இல்லறம் நடத்துவதால் வாரிசு உருவாகிறது. இது ஒன்றும் உலக மகா தத்துவமல்ல. ஆனால் புத்ரபாக்ய ப்ராப்திக்கு மனைவியின் ஜாதகம் மட்டுமே பார்ப்பது எப்படி சரியாகும்? இந்த பாக்யம் தரும் காலம் எப்போது இருவர் ஜாதகங்களிலும் கனிந்து வருகிறதோ, அப்போதுதான் வாரிசு உருவாகும். இந்த முறையில் கணித்து பலன் சொல்லும் ஜோதிடர் வாக்கும் பலிக்கும். எனவே புத்ரபாக்ய விஷயமாக வருத்தத்தில் இருப்பவர்கள், இருவர் ஜாதகத்தையும் தயங்காமல் பரிசீலிக்க வேண்டும். இதனால் இரட்டை செலவு ஆகத்தான் செய்யும்.

நகைச்சுவைக்காக: ஒரு ஜோதிடர், ஒரு ஜாதகிக்கு, அவர் ஜாதகத்தை மட்டும் பரிசீலித்துவிட்டு, ‘நிச்சயம் இன்னும் ஒரு வருஷத்திற்குள் குழந்தை பிறக்கும்என்றும், அதற்கு ஹோம பரிகாரங்கள் செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் உடன் வந்தவர்களோ துணுக்குற்றனர். எனென்றால், ஜாதகியின் கணவர் இரண்டு வருஷ ஒப்பந்தத்தில் வேலை விஷயமாக வெளி நாடு சென்று ஆறு மாதம் ஆகிறதாம்.

இவை ஒரு தம்பதியரின் ஜாதக விபரங்கள்:
கணவர். 15.08.1978. செவ்வாய்க்கிழமை. 01-38 AM கும்பகோணம் மூல நக்ஷத்திரம் 3-ம் பாதம். தனுசு ராசி, ரிஷப லக்னம், ஏகாதசி திதி ( சுக்ல பட்சம் )

மனைவி. 06.03.1982. சனிக்கிழமை. 06.44 PM கும்பகோணம், பூசம் நக்ஷத்திரம் 2-ம் பாதம். கடகராசி, சிம்மலக்னம். துவாதசி திதி ( சுக்ல பட்சம் )

விவாக தசவித பொருத்தப்படி இவை சேராத ஜாதகங்கள். அதிலும் புத்ர பாகயம் தரும் ராசி, ராசியதிபதி பொருத்தங்களும் திருப்திகரமாக இல்லை. தொடக்கமே தடையாக உள்ளது. ஜாதக கட்டத்தில் புத்ரபாக்ய ஸ்தானங்களும் சரியில்லை. இதனால் எந்த வித பரிகார பூஜைவழிபாடுகளும் செல்லுபடியாகாது. திருமணம் செய்துகொண்ட கால நேரம் மட்டும் சரியாக இருந்தது. எனவே எதிர்பார்க்கவேண்டாம் என்றும், காலம் கடத்தாமல் வேறு எதாவது ஏற்பாடு செய்துகொள்ளுங்கள், என்று கூறியபோது மிகுந்த மனவேதனை அடைந்தார்கள். என்ன செய்வது? உண்மை கசக்கத்தானே செய்யும்.

2 comments:

  1. சஷ்டாஷ்டக தோஷ ஜாதகம் விவாஹம் செய்ய நலமில்லை மேலும் தச பொருத்தத்துடன் பீஜ பலம் .சேத்திர பலம்(POTENT OF THE MALE &VIRGINITY OF THE FEMALE) பார்க்காமல் இணைத்தால் இப்படிதான் நடக்கும் உண்மையே.நன்றி.

    ReplyDelete
  2. குழந்தை பேருக்கு ஆணுக்கு ஆண்மையும் பெண்ணுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்கும் யோக்யதாம்சமும் முக்கியம் .நன்றி .

    ReplyDelete