Wednesday 12 February 2014

கருவுற்ற தாய்மார்களுக்கான பதிவு



 ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  கருவுற்ற தாய்மார்களுக்கான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ] .  கெற்பத்தில் சிசு வளரும் போதே, சிசுவின் பராமரிப்புக்காக ஜோதிட ரீதியாக தாய் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், மற்றும் தெய்வ வழிபாடுகள் பற்றி விளக்கிச் சொல்லும் கட்டுரை இதுவாகும்.

 தற்காலத்தில் அறிவியல் ரீதியாக கெற்பத்தில் சிசுவின் வளர்ச்சியை கண்டறிந்து, அதற்குத் தகுந்தாற் போல், மருத்துவ முறைகளை மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள்.  அது சிசு நல்ல முறையில் வளர்ச்சியடைய உதவுகிறது.  ஆனால் நமது மெய்ஞானிகள் ஜோதிடரீதியாக இதை அணுகி, சிசுவின் வளர்ச்சிப் பராமரிப்புக்காக ஜோதிட ஸ்லோகங்களை எழுதி வைத்துள்ளனர்.  மருத்துவத்தோடு ஒரு படி மேளே போய் அந்த நேரத்தில் வணங்கவேண்டிய தெய்வங்களை அறிந்துகொள்ளும் வழிமுறைகளையும் காட்டியிருக்கிறார்கள்.  அதில் ஒரு ஸ்லோகத்தின் பொருளை இப்போது பார்க்கலாம். 

 ஸ்ரீ வராகிமிகிரர், தனது பிருகத் ஜாதகத்தில், 4 வது அத்தியாயத்தில் 16 வது ஸ்லோகமாக இதை எழுதியுள்ளார்.  அதன் தமிழாக்கமாவது............................ " கெற்பந்தரிக்கும் முதலாவது மாதத்தில் சுக்கிலம் சுக்கிலமாகவே கருப்பையில் தங்கியிருக்கும். அதன் அதிபதி சுக்கிரன்.  இரண்டாவது மாதத்தில் சுக்கிலம் வளர்ந்து மாமிசமாகும்.  இதன் அதிபதி செவ்வய்.  மூன்றாவது மாதத்தில் மாமிசம் வளர்ந்து அவயங்களாகும்.  இதன் அதிபதி குரு.  நாலாவது மாதத்தில் எலும்புகள் உண்டாகும்.  இதன் அதிபதி சூரியன்.  ஐந்தாவது மாதத்தில் தோல் உருவாகும்.  இதன் அதிபதி சந்திரன்.  ஆறாவது மாதத்தில் உரோமம் வளரும்.  இதன் அதிபதி சனி.  ஏழாவது மாதத்தில் ஞானேந்திரியம் என்று சொல்லப்படும் பஞ்சேந்திரியங்கள் உண்டாகின்றன.  இதன் அதிபதி. புதன்.  எட்டாவது மாதத்தில் உந்திக்கொடியின் வழியாக, தாய் உண்ணும் உணவின் சத்தை சிசு உண்ண ஆரம்பிக்கிறது.  இதன் அத்பது. நிஷேக லக்னாதிபதி.  ஒன்பதாவது மாதத்தில் சிசுவிற்கு மானிட ஜென்மத்தின் கவலைகள் உண்டாகின்றன.  இதன் அதிபதி சந்திரன்.  பத்தாவது மாதத்தில் சிசு பூமியில் வந்து பிறக்கின்றது.  இதன் அதிபதி சூரியன் என்பதாம்.

 மேற்கூறிய ஸ்லோகப்படி இரண்டு உதாரணங்களை பார்க்கலாம்................................1] கருத்தரித்த முதலாவது மாதம். அதிபதி சுக்கிரனாவார்.  சுக்கிரனுடைய சுவை புளிப்பு.  எனவே தாய்க்கு புளிப்பானவை தேவைப்படுகிறது.  ஜோதிட ரீதியாக அப்போது சுக்கிரன் இருக்கும் நிலையறிந்து அதற்கான உணவை மேற்கொள்வதுடன், சுக்கிரனுக்குரிய தெய்வத்தை வழிபடுவதும் சிறப்புடையதாகும்.  சுக்கிரன் நீசமடைந்திருப்பின் நீரிழிவுக்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதும் நல்லது.  இவ்வாறு சுக்கிரனின் காரகத்துவத்திற்கு தகுந்த நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொள்ளலாம்.................................2] ஒன்பதாம் மாதத்தில் மானிட ஜென்மத்தின் கவலைகள் சிசுவை பற்றுகிறது.  அப்போது அதிபதியாக சந்திரன் இருப்பதால், தாயின் மனம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  மனோ ரீதியாக சோக, துயர சம்பவங்கள் பாதிக்காத வண்ண்ம் இருத்தல் நல்லது.  முக்கியாக சோக உணர்ச்சியை தூண்டக்கூடிய மெகா சீரியல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நலம்.  சந்திரன் காரகத்துவப்படி உணவை மேற்கொள்வது மிக நன்று.  சந்திரன் கெடும் நாட்களில் நீர் சம்பந்த தொல்லைகள் அதிகரிக்கும்.  அதை ஜோதிட ரீதியாக முன்பே அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்ளலாம்.  அத்துடன் அதற்குரிய தெய்வத்தை அன்னாட்களில் வணங்கியும் நிம்மதியடையலாம்.   

 இம்மாதிரியான் ஜோதிட தகவல்கள் நிறைய உள்ளன.  அவைகளை நல்ல, திறமையான் ஜோதிடர் அறிந்து வழிகாட்டுவார் என்பதில் சந்தேகமேயில்லை.  இப்படி ஜோதிடத்தின் உதவியால் நல்ல உணவு முறைகளை மேற்கொண்டு, உரிய தெய்வத்தை வணங்கி, தகுந்த நேரத்தில் சரியான ம்ருத்துவமும் மேற்கொண்டு, ஆரோக்கியமான நற்குழந்தையை ஈன்றெடுக்கலாம்  இறைவன் துணையிருப்பான்.  நன்றி.               

1 comment:

  1. நல்ல பதிவு - பாலுசரவண சர்மா

    ReplyDelete