Wednesday 29 January 2014

கடன்சுமையால் கலங்கிகொண்டிருக்கும் ஜாதகர்களுக்கான பதிவு இது



ஓம் நமசிவாய.  வணக்கம்.  கடன்சுமையால் கலங்கிகொண்டிருக்கும் ஜாதகர்களுக்கான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ] 

ஜாதக பாவரீதியாக சிந்தித்துப் பார்த்தால் கடன் ஏற்படுவதற்கான காரணங்களை பட்டியலிடமுடியும்.

1.  தன் சொந்த காரணங்களால் ஏற்படுவது [ உம்.  கௌரவ செலவுகள். தீய பழக்கவழக்கங்கள் ]
2.  குடும்ப நிர்வாக பற்றாக்குறையால் ஏற்படுவது.
3.  அடுத்தவருக்கு வாக்குறுதி தந்து, அதை நிறைவேற்றாமல் போவதால் ஏற்படுவது.
4.  உடன் பிறந்தவர்களால் ஏற்படுவது
5.  நண்பர்களால் ஏற்படுவது
6.  சொத்துக்களால் ஏற்படுவது [ வாங்குவதாலும் அடைபடாமல் போவதாலும் ]
7.  தாயார் வழி உறவினர்களால் ஏற்படுவது
8.  பிள்ளைகளால் ஏற்படுவது
9.  ஆடம்பர செலவுகளால் ஏற்படுவது
10.  விரோதிகளாலும், துரோகிகளாலும் ஏற்படுவது.  [ ஏமாற்றம், திருட்டு ]
11.  மனைவி, மற்றும் அவள் வழி உறவினர்களால் ஏற்படுவது
12.  எதிர்பாராத கடுமையான நோய்களாலும், விபத்தாலும் ஏற்படுவது.
13.  சரியாக திட்டமிடாத கூட்டு வியாபாரத்தால் ஏற்படுவது
14.  தந்தை வழி உறவினர்களால் ஏற்படுவது.
15.  தொழிலில் ஏற்படும் இழப்பாலும், நிரந்தரமான தொழில் அமையாததாலும் ஏற்படுவது.
16. வரவேண்டிய வரவுகள் நிலுவைலேயே இருந்து கொண்டிருப்பதால் ஏற்படுவது
17.  எவ்வளவு வந்தாலும் செலவுகள் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருப்பதால் ஏற்படுவது

மேற்கண்ட பட்டியலில் இருப்பவைகளின் ஏதேனும் ஒன்றாவது நம் வாழ்க்கையில் நிச்சயமாக இருக்கும். [ இதில் நான் மட்டும் விதி விலக்கல்ல.  எனக்கும் பாதிப்பு உள்ளது ] இன்றைய சமுதாயத்தில் கடனின்றி வாழ்கின்ற ஒரு மனிதனைக்கூட காட்ட இயலாது.  அனால் அதுவே பெரும் சுமையாகி வருத்தும்போது மிகவும் தவிப்பாக இருக்கிறது.  இவைகளை தவிர்க்கவேண்டும் அல்லது மாற்றவேண்டும் அல்லது விடுதலை பெற்று நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதற்கெல்லாம் வழி இருக்கிறதா?  ஆண்டவனிடம் முறையிடுவதா?  உற்றார் உறவினர்கள் உதவுவார்களா?  அல்லது வாழ்க்கையே கடைசீ வரை இப்படித்தானா? யார் வழிகாட்டுவார்கள்?  என்றெல்லாம் எண்ணி குழப்பமான நிலையில் இருப்பவர்களுக்கு " ஜோதிடம் வழிகாட்டும் ", என்று சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.

ஜோதிடம் காட்டும் வழிகள்:

1.  குடும்ப நிர்வாக திறமையின்றி கடனாளியாகும் ஜாதகர்கள், ஜாதகப்படி நிர்வாக திறமையுள்ள குடும்ப உறுப்பினரிடம் நிர்வாகத்தை மாற்றிவிடுவது.
2.  சொத்துக்களில் கடன் இருப்பின், ஜாதகப்படி கடன் அடையும் ராசியுடைய குடும்ப உறுப்பினர் வசம் சொத்துக்களை ஒப்படைப்பது
3.  ராசிப்படி தனக்கு கடன் வராத வகையில் அமையும் சொத்துக்களை வாங்குவது. [ வீடு, நிலம், நிதி, தங்கம் போன்றவைகளை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ராசிப்படி மாற்றிக்கொள்வது ]
4.  நோய், நொடிகளால் அதிக செலவு வரும் எனில் அதை முன்கூட்டியே அறிந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது.
5.  கூட்டு வியாபாரம் தொடங்குவதற்கு முன் சரியான நபர்களை தேர்வு செய்வது.
6.  ஜாதகப்படி சரியான தொழில் அமைத்துக்கொண்டு முதலீடு செய்வது, அல்லது அந்த முதலீட்டை ராசியான குடும்ப உறுப்பினர் பெயரில் செய்வது.
7.  பிள்ளைகளுக்காக அதிக பட்ச செலவுகளை செய்யும் போது [ உம். கல்விக்கடன்சுமை ] அதற்குண்டான அனுகூலங்களை ஆராய்வது.
8.  தேவையில்லாத செலவுகளை குறைக்க முயற்சி செய்தல், அதாவது அதற்குண்டான தெய்வத்திடம் முறையிடுவது
9.  இதுபோல் இன்னும் விடுபட்டவைகள் உள்ளன.

இவைகளில் தனக்குரிய வழிகாட்டுதலை தேர்வு செய்து கொண்டு, வாழ்க்கையை சரியான முறையில் திட்டமிட்டு நடத்தி, கூடியமட்டும் மகிழ்ச்சியை வரவு வைத்து, நிம்மதியை சேமித்து வாழலாமே!  இறைவன் திருவருளானது எல்லோருடைய வாழ்க்கையிலும் நிம்மதியை நிலை பெற செய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.  ஜோதிடத்தின் துணையுடன் நல்வழிமுறையை தேடுவோம்.  நன்றி.

No comments:

Post a Comment