ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். நவரத்தினங்கள் பற்றிய பதிவு இது. பகுதி. 6.
உதாரண ஜாதகமாக முன்னாள் பிரதமர். திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்கள் ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது. சாதகமான பலன் தராத செவ்வாய் திசையில், செவ்வாயின்
ரத்தினக்கல்லான பவளம் அணிந்து, இந்தியாவுக்கு அவர் பிரதமரானார். அதன் கணிப்பு எப்படி? என்று ஆராய இருக்கிறோம்.
திரு. ராவ் அவர்கள் இந்தியப்பிரதமரான
நாள். 21.07.1991. அப்போது அவருக்கு செவ்வாய் திசை, சுயபுக்தி நடப்பிலிருந்தது. செவ்வாய், 3. 8 ஆகிய துர்ஸ்தானங்களுக்கு அதிபதியாகி,
தசமத்தில் பகை மற்றும் அஸ்தமனம்.. அவரது தொழில்
அரசியல். மேற்கண்ட சூழ்னிலையில் அவர் அரசியலில்
நிச்சயமாக பிரகாசிக்க முடியாது. இந்த சாதகமற்ற
நிலையை, பவளம் அணிந்து சாதகமாக்கிகொண்டார்.
அது எப்படியென்று பிரதிகூலசக்தி முறைபடி கணித்து பார்க்கலாம். விதிப்படி, 3 ஆம் ஸ்தானாதிபதி, கேந்திரமாகிய தசமத்தில்,
விரயாதிபதியாகிய சூரியனுடன் இணைந்து விபரீத ராஜ யோகம் தருகிறார். செவ்வாய் அஷ்டமாதிபதி
என்பதால் இந்த யோகம் கிடைத்தது. [ இந்த விபரீத ராஜயோகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள,
மஹாகவி காளிதாசர் இயற்றிய ஜோதிட சாஸ்த்திரமாகிய, உத்திரகாலாம்ருதத்தில், 4 ஆவது காண்டம்,
22 வது ஸ்லோகம் பாருங்கள். மேலும் சூரியனும், செவ்வாயும் தசமத்தில் திக்பலம் பெறுகிறார்கள். சூரியனும், செவ்வாயும் நட்பு. எனவே சூரியன் இணைவு நல்லதே. செவ்வாயின் அஸ்தமனம், பகை மட்டுமே பின்னடைவாக இருந்தது. செவ்வாய் 3 ஆம் ஸ்தானாதிபதி என்பதால் அவருக்குரிய
பவளம் அணிந்தததால், இந்த பின்னடைவுகள், சாதகமாயின. இப்படி செவ்வாய் அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவரது
பவளம் சிறப்பாக செயல்பட்டது. செவ்வாய் 3 ஆம்
ஸ்தானாதிபதியாக இருந்து, தசமம் தவிர வேறு இடத்தில் இருந்திருந்தாலோ, அல்லது சூரியன்
மட்டும் இடம் மாறியிருந்தாலோ, திரு ராவ் அவர்களின்
வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும். எனவே
பிரதிகூலசக்திமுறையை கையாளும்போது மிகமிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள
முடிகிறது. இனி நவரத்தினங்கள் சம்பந்தமாக இன்னும்
சில முக்கியமான விபரங்களை பார்க்கலாம்.
01. அனுகூல சக்திமுறை ஆபத்தில்லாதது. பாதுகாப்பானது.
02. பிரதிகூல சக்தி முறை ஆபத்தானது. கணிப்பதில் சிக்கலை
விளைவிக்கக் கூடியது. எனவே இம்முறையை, தவிர்த்து
விடுவது நல்லது என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.
3. தேர்வு செய்யப்படும் நவரத்தினங்கள் குறையில்லாதவைகளாக
இருக்க வேண்டும். அதில் ஏதேனும் குறை இருந்தாலோ,
போலியாக இருந்தாலோ, அவை பயனற்றுப்போகும். சில
நேரங்களில் எதிர்விளைவுகளையும் உருவாக்கிவிடும்.
04. ஜோதிடர் தேர்வு செய்து தரும் ரத்தினத்தை அணியுமுன்,
ஏற்கனவே ஏதேனும் ரத்தினங்கள் அணிந்திருந்தால் அவைகளை பற்றி ஜோதிடரிடம் சொல்லி விடுவது
நல்லது. அவ்வாறில்லாமல், ஏற்கனவே அணியும் ரத்தினங்களோடு,
புதியவைகளையும் அணிந்தால், ஒன்றுக்கொன்று முரண்பட்டு எதிர்பார்க்கும் நற்பலனை அவைகள்
தாரமல் போகும்.
05. குறையில்லாத ரத்தினங்களை வாங்கினால் மட்டும் போதாது. அவைகளை பராமரிப்பதிலும் குறை இருக்கக்கூடாது. பெண்கள் அந்த மூன்று நாட்கள் மட்டும் அணீயக்கூடாது. அணியாத நேரத்தில் பூஜையறையில் பத்திரப்படுத்தி வைப்பது
சிறந்தது.
06 முதன் முறையாக அணியும்முன் மேற்கொள்ள வேண்டிய கடமைகள். சுத்தமான நீரில் அபிஷேகம் செய்ய வேண்டும். கங்கை நீர் கிடைத்தால் இன்னும் நல்லது. அதன்பின் பாலபிஷேகம் செய்ய வேண்டும். [ பாக்கெட்பால்,
குளிர் சாதன பெட்டியில் இருக்கும் பால் தவிர புதிய பசும்பால் மட்டுமே உகந்தது.. பின் அதை சம்பந்தப்பட்ட தெய்வ சன்னதியில் வைத்து
வழிபட வேண்டும். திருக்கோவில் அர்ச்சனை, மற்றும்
ரத்தினத்திற்குரிய கிரக வழிபாடு நல்லது. அதன்
பின்பு மிக சரியான விரலில் அதை அணிய வேண்டும்.
தினசரி ஒரு முறை சம்பந்தப்பட்ட நவக்கிரக மந்திரத்தை சொல்வது நல்லது. [ [ [ தொடரும். ] ] ]
No comments:
Post a Comment