ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். ' அபிஜித் ' என்ற சொல் இந்திவ வானவியலோடும், இந்திய
வேத ஜோதிடத்தோடும் எவ்வகையான தொடர்பு கொண்டுள்ளது என்று விவரிப்பதே இக்கட்டுரையின்
நோக்கம். எனவே கட்டுரையின் முதல் பகுதி
1. அபிஜித்தும் வானவியலும் என்றும், இரண்டாவது
பகுதி 2. அபிஜித்தும் ஜோதிடவியலும் என்றும் தலைப்பிடப்பட்டு, பதிவிடப்படுகிறது. இக்கட்டுரை
உருவாவதற்கு தங்களது மதிப்புயர்ந்த கருத்துகளை வழங்கிய ஜோதிட நண்பர்கள் திரு ரஞ்சித்பாபு,
திரு. பவளக்கண்ணன், திரு அஸ்ட்ரோ ராஜசேகரன். திரு மணிகண்டன் பாரதிதாசன் ஆகியோருக்கு
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டுரை
உருவாவதற்குரிய காரணங்கள்.
1. முன்னொரு காலத்தில் அபிஜித் என்ற நக்ஷத்திரம் ஜோதிடத்தில்
28 வது நக்ஷத்திரமாக கருதப்பட்டு வந்தது. தசாபுக்தி
கணிதம் அதற்கேற்ப இருந்தது. ராகு கேதுக்கள்
கிரக அந்தஸ்து பெற்றபின் இந்த அபிஜித் விலக்கப்பட்டு மீதி 27 நக்ஷத்திரங்களை கொண்டு
; விம்சோத்தரி ' தசாபுக்தி கணிதம் உருவானது, என்ற ஒரு கருத்து கூறப்படுகிறது.
2. தற்போதும் இந்த அபிஜித் நக்ஷத்திரம் முஹூர்த்த வேளை
குறிக்கும்போது கணக்கிடப்படுகிறது. உத்திராடத்தின்
கடைசி பகுதியும், திருவோணத்தின் தொடக்கப்பகுதியும் இணைந்ததுதான் அபிஜித் நக்ஷத்திரம்
என்றும் கூறப்படு. அபிஜித் என்பதை இந்திய வேத
ஜோதிடமானது ஒரு சுபவேளையாக கூறுகிறது. இந்த
சுபவேளையை ஜோதிடவியல் சாஸ்த்திரம் ' அபிஜித ' என்று பெயரிட்டுள்ளது. இதுவும் அதுவும் ஒன்றா என்று சிந்திப்போம்.
அபிஜித்தும் இந்திய வானவியலும்..............
அபிஜித் என்பது ஒரு நக்ஷத்திரகூட்டத்தில்
இருக்கும் மிக ஒளி பொருதிய நக்ஷத்திரமாகும்..
இதை மேல்னாட்டவர் ' வேகா ' என்கிறனர்...
. வடதுருவத்தில் கோடை காலத்தில் தலைக்கு
மேல் உச்சியில் தெரியக்கூடியது. குளிர்காலத்தில்
வடதுருவத்தின் வடதிசையில் சற்று தாழ்வாக தெரியக்கூடியது. எனவே ஜோதிடவியலுக்கும் இந்த 28 வது நக்ஷத்திரம்
எனப்படும் அபிஜித்துக்கும் சம்பந்தமில்லை.
இதை நம் ஜோதிடவியல் ஏன்? 28 வது நக்ஷத்திரமாக பட்டியலில் சேர்க்கவில்லை என்பதைபற்றி
இனி சிந்திப்போம்.
அபிஜித்தும் ஜோதிடவியலும்.............
இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கன
நக்ஷத்திரங்கள் உள்ளன. அந்த நக்ஷத்திரங்களிடையே
நமது சூரிய மண்டலம் அமைந்துள்ளது. சூரியமண்டலத்திலுள்ள
அனைத்து கிரகங்களும் சுற்றி வரும் சுற்றுப்பாதையில் ஒரு சில நக்ஷத்திரங்கள் உள்ளன. அவைகளே அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களாகும்.. இவையனைத்தும் இரவில் சந்திரனின் பின்புலத்தில் தெரியக்கூடியவை.
எந்த கிரகமும் அபிஜித் என்று வானவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நக்ஷத்திர கூட்டத்தின்
பக்கம் செல்வதேயில்லை. அதனால் சந்திரனின் பின்புலத்தில்
அபிஜித் தோன்றாமல் வடதுருவம் பக்கம் தோன்றுகிறது.
எனவே இந்திய ஜோதிடவியலானது 27 நக்ஷத்திரங்கள் பட்டியலில் இன்னொரு நக்ஷத்திரமாக
அபிஜித்தை சேர்க்கவில்லை.
மேற்கண்ட கருத்துக்கு ஆதரவாக
இரு புராண நிகழ்வுக்ளை சொல்லலாம். 1.ஸ்ரீமுருகப்பெருமானை
வளர்த்த காத்திகைபெண்களை கார்திகை நக்ஷத்திரமாக மாறி, வானில் நிலையாக இருக்குமாறு ஸ்ரீசிவபெருமான்
அருள்புரிந்தார். இந்த கார்த்திகை நக்ஷத்திரம்
பூமியின் ஓடு பாதையில் அமைந்ததாலும், சந்திரனின் பின்புலத்தில் தெரிவதாலும், இந்திய
ஜோதிடவியல் 27 நக்ஷத்திரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ளது. 2. இதேபோல்
துருவன் என்னும் பக்தனை துருவ நக்ஷத்திரமாக மாறி வானில் நிலைத்து இருக்குமாறு திருமால்
அருள் புரிந்தார். இந்த துருவ நக்ஷத்திரம்
வடதுருவத்தில் இன்றும் உள்ளது. ஆனால் இது
27 நக்ஷத்திரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த துருவ நக்ஷத்திரமும் இறைவன் அருளால் தோன்றியதேயாயினும்,
பூமியின் ஓடு பாதையில் இல்லாததும், சந்திரனின் பின்புலத்தில் தென்படாததாதுமே காரணம்.
அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களில் சிலவற்றை நாம்
அடையாளம் கண்டு இரவில் வானத்தில் பார்த்தாலும், சந்திரனின் பின்புலத்தில் எந்த நக்ஷத்திரம்
இருக்கிறதோ, அதுவே அன்றைய தின நக்ஷத்திரமாகும்.
எனவே அன்று ஒரு குழந்தை பிறந்தால்,
ஜனன ஜாதகத்தில் அன்றைய நக்ஷத்திரம் ஜென்ம நக்ஷத்திரமாகிறது. அபிஜித் ஜென்ம நக்ஷத்திரமாவதில்லை. இப்படி ஜாதகத்தில்
இடம் பெறாத நக்ஷத்திரம் எவ்வாறு தசாபுக்தியில் பழங்காலத்தில் இருந்தது என்று கூறமுடியும்? எனவே அபிஜித் நக்ஷத்திரங்களின் பட்டியலில் இருந்தது என்றும், விம்சோத்தரி தசாகணித காலம் தொடங்கியபோது
விலக்கப்பட்டது என்பதும் எற்புடையதல்ல. மேலும்
பூமியின் ஓடுபாதையில் இடம் பெறாததும், சந்திரனின் பின்புலத்தில் தோன்றாததுமான அபிஜித்
என்ற வட துருவ நக்ஷத்திரம் எவ்வாறு உத்திராடத்திற்கும், திருவோண்த்திற்கும் இடையில்
வரும்? எனவே இதுவும் ஏற்புடையது அல்ல. இவையெல்லாம் என் தனிப்பட்ட கருத்தாகும். அப்படியானால் தற்போது ஜோதிடனூல்களில் குறிப்பிடப்படும்
அபிஜித் என்பது எது? என்று இனி பார்க்கலாம்.
அபிஜித் என்பது வடமொழிஸ்சொல்.. இதன் தமிழாக்கம் பார்க்கலாம். 'அபி' என்றால் தைரியமான என்று பொருள். 'ஜித்' என்றால் வெற்றி என்று பொருள். இரண்டையும்
இணைத்தால் நிச்சயமான வெற்றி எனக்கொள்ளலாம். இன்னேரத்தில் செய்யப்படும் எல்லா சுப காரியங்களும்
நிச்சயம் வெற்றியடையும். இதை அபிஜித் முஹூர்த்தம்
என்று ஜோதிடவியல் சொல்கிறது. முகூர்த்தனிர்ணயம்
என்னும் காலவிதானம் என்னும் நூல் இதைபற்றி சொல்வதை பார்ப்போம்.........................
சூரியன் நடுப்பகலில் உச்சியில்
இருக்கும்போது, [ 1.5 நாழிகை வேளை ] அபிஜித் முஹூர்த்தம். எல்லா தேசங்களுக்கும் இது ஏற்கத்தக்கது. ஆகையால் அபிஜித் முகூர்த்தத்திலே சௌளம், உபனயனம்
மாத்திரம் நீக்கி, மற்ற எல்லா சுப காரியங்களும் செய்யலாம்.
பொதுவாக நடுப்பகல் என்றால்
12.00 மணி என்று கொள்வது தவறாகும். அன்றைய
தின அகசை இரண்டாக பிரித்து, வரும் நாழிகையை மணி, நிமிடங்களாக மாற்றி அன்றைய தின சூரிய
உதய நேரத்தோடு கூட்ட வேண்டும். இந்த கூட்டுதொகை
நடுப்பகலாகும். இதற்கு முன் உள்ள 18 நிமிடங்களும்,
பின் உள்ள 18 நிமிடங்களும் அபிஜித் எனும் சுபவேளையாகும். அபிஜித் முஹூர்த்தம் என்னும் 1.5 நாழிகை என்பது
36 நிமிடங்களாகும்.
உபனயனத்திற்கு, பூராடம்,
உத்திராடம், அபிஜித் ஆகியவை ஆகாது, என்று சில
நூல்கள், ஆகாத நக்ஷத்திரங்களை குறிப்பிடும்போது அதனுடன் அபிஜித்தையும் சேர்த்துவிடுகிறது. எனவே அபிஜித் என்றால் நக்ஷத்திரம் என்று சொல்லிவிடுகிறனர். ஜோதிடனூல்கள் கூறும் இந்த அபிஜித்தை நடுப்பகல்,
உச்சிவேளை என கொள்ளவேண்டும்.
கால புருஷதத்துவப்படி,
மேஷம் உதயராசி, துலாம் அஸ்தமனராசி, இடையில்
உள்ள மகரம் நடுப்பகல் ராசி. இந்த நடுப்பகலில்
உச்சிவேளை என்பது உத்திராடத்தின் கடைசி பகுதியும், திருவோணத்தின் தொடக்கப்பகுதியும்
ஆகும். இந்த இரு நக்ஷத்திரங்களுக்கும் இடையே
உள்ள காலம் 'அபிஜித்' எனப்படுகிறது. ஆனால்
இத்தனைக்கும் மேலாக ' நக்ஷத்திர சிந்தாமணி ' எனும் மிக பழைமையான நூல், அபிஜித் நக்ஷத்திர
பலனை கிரக வாரியாக சொல்லியிருக்கிறது. இது
எப்படி? என்பதுதான் புரியாத புதிராகவே இருக்கிறது.
No comments:
Post a Comment