ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். " ராசி சக்கரமும் பாவ சக்கரமும் ",
...................... பாரம்பரிய முறையிலான
பதிவு. இரு சக்கரங்களை பற்றி ஜோதிட ஆர்வலர்களுக்கும்,
ஜோதிடம் பயில்பவர்களுக்கும், எடுத்து சொல்லும் வகையில், நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும்
பதிவு இது.
ராசி சக்கர சிறப்புகள்
: ................... ஆதி காலம் தொட்டு, முதன்
முதலில் எழுதப்படும், ஜாதக குறிப்பில் இடம் பெறுவது ராசிக்கட்டம். முழுமையான ஜாதக கணிதம் கணித்து எழுதுபவர்களும்,
முதலில் ராசிக்கட்டத்தை கணித்துவிட்டு, பின்பு நவாம்சம், திரேக்காணம் போன்ற வர்க்க
சக்கரங்களை கணிக்கிறனர். ராசி கட்டத்தில்,
ஸ்தான பலம், அஸ்தமனம், வக்கிரம் திக் பலம் ஆகியன கொண்டு கிரக பலங்கள் கணிக்கப்படுகிறன. ராசி சக்கரம் என்பதால், ஒவ்வொரு கட்டமும் ராசிகளின்
பெயரால் அழைக்கப்படுகிறது. ஸ்தான பலம் முதன்மையானது
என்பதால், லக்னத்திலிருந்து எண்ணிவரும் கட்டத்தை, ஸ்தானம், வீடு, இடம் என்றெல்லாம்
அழைக்கப்படுகிறது. [ உ....ம்..
3 ஆம் வீடு. 3 ஆம் ஸ்தானம். 3 ஆமிடம் ]. ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் உரிமையுடைய கிரகத்துக்கு
ஸ்தானாதிபதி என்று பெயர். அதுபோல் ராசிக்கு
உரிமையுடைய கிரகத்துக்கு ராசியதிபதி என்று பெயர். மேற்கண்ட சக்கரங்களுக்கெல்லாம், நமது மூலனூல்களில்
பலன்கள் சொல்லப்பட்டுள்ளன. வர்க்க சக்கரங்களின்
பயன்பாடுகள் பலவாறாக இருந்தாலும், ராசிக்கட்டத்திலுள்ள கிரக பலங்களை கணிக்கவும், அவைகளி
நம் முன்னோர்கள், துணைக்கு வைத்துக்கொண்டனர்.
பாவ சக்கரத்தின் சிறப்பு
: .................. ராசி சக்கரத்திலிருந்து,
பல அள்வீடுகளை வைத்து பல பாகங்களாக பிரித்து கணிக்கப்படுபவை வர்க்க சக்கரங்களாகும். அது போல், ராசிசக்கரத்திலுள்ள லக்னத்தை முதன்மையாக
கொண்டு, பாகையை அளவீடாக கொண்டு பிரித்து கணிக்கப்படுவது பாவ சக்கரம். பாவ சக்கரம் கணிப்பது பற்றி பல நூல்களில் விரிவாக
சொல்லப்பட்டுள்ளன. ராசி கட்டத்திலுள்ள கிரக
பலம் கணிக்க, வர்க்க சக்கரங்கள் பயன்படுவதுபோல், பாவ சக்கரமும் பயன்படுகிறது. இதுவும் ராசி கட்டத்தின் ஒரு துணை சக்கரமே. ஒவ்வொரு பாவ சக்கரத்திலும், லக்னம், லக்ன பாவத்தில்
நடுபாகையில் இருக்கும். அதுபோல் நுடுவில் அமைந்திருக்கும்
கிரகங்கள், அந்த பாவத்தில் வலிமையுடையன என்றும், அடுத்த பாவத்திற்கு அருகாமையில் அமையும்
வகையில் அதன் பாகை அமைந்தால், அந்த பாவத்தில், அந்த கிரகம் பலவீனமடைகிறது என்றும் பொருள். இது ஒரு எளிமையான விதி முறை. இப்படி கிரக வலிமை அறியும், துல்லிய கணித விதி
முறைகளும் உள்ளன. பாவ சக்கரத்தை கொண்டு பலன்
சொல்வதற்கென்று சிறப்பு விதி முறைகளும் உள்ளன.
இது பாவ சக்கரம் என்பதால், கட்டங்கள் பாவம் என்று பெயரிடப்பட்டன. [ உ...ம்...
3 ஆம் பாவம். ]. ராசி சக்கரத்திற்கு இருப்பது போல், பாவ சக்கரத்தில்
இருக்கும் கிரகங்களுக்கு, ஸ்தானாதிபதி, ராசியதிபதி என்ற பெயர்கள் கிடையாது. ஒரு பாவத்தை பாகைப்படி பிரிக்கும் போது, அதில் ராசி
சக்கரத்தின் இரு ராசிகள் அமையும். எனவே ஒரு
பாவ கட்டத்திற்கு, இரு கிரகங்கள் உரிமை கொண்டாட வேண்டிவரும். ஆகையால் பாவ கட்டங்களை, ராசிகள் பெயரால் குறிப்பிடுவதும்,
பாவ கட்டங்களில் இருக்கும் கிரகங்களை, , ஸ்தானாதிபதி, பாவாதிபதி, ராசியதிபதி என்ற பெயர்களால்
குறிப்பிடுவதும் தவறாகும்.
பாவ சக்கரத்தில் உள்ள சில
பின்னடைவுகள் : ....................... விவாஹதசவித
பொருத்தம், கோசரபலன் ஆகியவை அறிய பாவ சக்கரம் உதவாது. பாதசாரப்படி, நக்ஷத்திராதிபன் பலனும், ஸ்தானாதிபதி
பலனும் அறிய பாவ சக்கரம் உதவாது. சில ஜோதிடர்களால்,
" பாவகமாறுதல் ", என்ற பெயரில், தவறான பலன் சொல்லப்படுகிறது. அதை பற்றியும் சற்று விரிவாக பார்க்கலாம்............... .........
[ உ .... ம் ] ராசி சக்கரத்தில் கடகலக்னத்தில்
குரு உச்சம். இதுவே பாவ சக்கரத்தில், விரையத்தில்
குரு இருப்பு என்று கொள்வோம். இப்படி மாறியிருப்பதே
பாவகமாறுதல் எனப்படுகிறது. இதை, குரு மிதுனத்தில்
பகையாக இருக்கிறார் என்று சொல்லும் ஜோதிடர்கள் உண்டு. இதை விட ஒரு படி மேலே போய், மிதுனத்தில் பகைபட்ட
குருவுக்கான விரைய பலன் சொல்லிவிடுவர். கேட்டால்
இதை பாவகமாறுதல் என்பர். இது முற்றிலும் தவறு. பாவ சக்கரத்திற்கு, ராசிகளின் பெயரும் கிடையாது. ஸ்தானபல கணிதமும் கிடையாது. குருவின் இருப்பிடம் புரிய வேண்டுமே என்பதற்காக,
ஒரு அடையாளத்திற்காக, மிதுனம் என்று சொல்லப்படுகிறதே தவிர, உண்மையில் அது மிதுனமல்ல. மேற்கண்ட குரு விரைய பாவத்தில், பாகைப்படி நடுவில்
இடம் பெற்றிருந்தால், குரு விரைய பாவ பலனை அதிகமாக தருவார் எனக்கொள்ள வேண்டும். அப்போது ராசி சக்கரத்தில் கவனித்தால், குரு, ராசி
சந்தியில் அமைந்திருக்கலாம். இந்த சந்தி சந்தேகத்தை
போக்கிக்கொள்ளவும் பாவ சக்கரம் பயன்படுகிறது.
இரு சக்கரங்களையும் இணைத்து பார்க்கும்போது, குரு விரையத்தில் உச்ச பலன் என்று
கொள்ள வேண்டும். இதுவே குரு பாவ சக்கரத்தில்,
விரைய பாவத்தின் கடைசி பாகைகளில் அமைந்திருந்தால், விரையத்தில் குரு பலவீனம் எனக்கொண்டு,
ராசி சக்கரப்படி, லக்ன குரு உச்சம் எனக்கொள்ள வேண்டும். எனவே ஒரு கிரகம் பாவ சக்கரத்தின் ஒரு பாவத்தில்
இருந்தால், முதலில் அந்த கிரகம் இருக்கும் பாகையை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் பலாபலத்தை
தீர்மானிக்க வேண்டும். இதுவே சரியான வழிமுறையும்,
எளியதுமாகும். நன்றி.
நல்ல விளக்கம்
ReplyDeleteநவாம்சத்தில் வர்கோத்தமம் உண்டு என்றால் ஆட்சி உச்சம் நீச்சம் மறைவு இதெல்லாம் உண்டா??லக்னம் வர்கோத்தமம் நல்லதா??தீயதா?தயவுசெய்து விளக்கவும்.நன்றி!!
ReplyDeleteநவாம்சத்தில் வர்கோத்தமம் உண்டு என்றால் ஆட்சி உச்சம் நீச்சம் மறைவு இதெல்லாம் உண்டா??லக்னம் வர்கோத்தமம் நல்லதா??தீயதா?தயவுசெய்து விளக்கவும்.நன்றி!!
ReplyDeleteநவாம்சத்தில் வர்கோத்தமம் உண்டு என்றால் ஆட்சி உச்சம் நீச்சம் மறைவு இதெல்லாம் உண்டா??லக்னம் வர்கோத்தமம் நல்லதா??தீயதா?தயவுசெய்து விளக்கவும்.நன்றி!!
ReplyDelete